தமிழகத்தில் ஆக.,17 நிலவரப்படி 1,804 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தினசரி பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை பாதிப்பு முன்னதாக சிறிய அளவில் மட்டுமே இருந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் நாட்டிலேயே அதிக பாதிப்பு உள்ள மாநிலமாக மாறியது. இதனால் தமிழக அரசு தீவிர முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநிலம் முழுவதும் அமல் படுத்தியது. பின்னர், ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பின்னர் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் தினசரி பாதிப்பு குறித்து சுகாதாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு வருகிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் எலக்ட்ரிக் கார் அறிமுகம் – ஓலா நிறுவனத்தின் புதிய திட்டம்
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், 1,804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,92,436 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 32 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 34,579 ஆக உயர்ந்துள்ளது. இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இதனால் பதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,37,632 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 20,225 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 209 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மொத்தம் 5,41,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக சென்னையில் 200 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தினசரி உறுதி செய்யப்படுகிறது. இன்று மட்டும் 1,50,724 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.