ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டும் கண்ணன், உண்மையை தெரிந்துகொண்ட குடும்பத்தினர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், இன்று ஐஸ்வர்யா கழுத்தில் கண்ணன் தாலி கட்டுகிறார். அப்போது ஜீவாவும், கதிரும் வந்து பார்த்துவிடுகின்றனர். பிரசாந்த் அப்போது அங்கே வர கண்ணனை அடிக்கிறார். கதிர் கண்ணனை அடிக்கவிடாமல் தடுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா கழுத்தில் கண்ணன் தாலி காட்டுகிறார். அப்போது கதிரும், ஜீவாவும் தாலி கட்டும் போது வர, கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டி முடித்து விடுகிறார். பின்னர் ஐயர் குங்குமம் வைக்க சொல்ல கண்ணன் வைக்கிறார். அதை பார்த்து கதிரும், ஜீவாவும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க கண்ணனும் அவர்களை பார்த்து விடுகின்றனர்.
அப்போது பிரசாந்த் அங்கே வர கண்ணனை அடிக்கிறார். கதிர் கண்ணனை அடிக்க வேண்டாம் என பிரசாந்தை தடுக்கிறார். பிரசாந்த் மீண்டும் கண்ணனை அடிக்க ஐஸ்வர்யா தடுக்கிறார். எனக்கு கண்ணன் மாமாவை தான் பிடிச்சுருக்கு உன்னை எனக்கு பிடிக்கலை என்று சொல்லியும் நீ கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணில அப்போ இப்படி தான் நடக்கும் என்று சொல்ல பிரசாந்த் உங்களை எப்படி வாழ விடுறேனு பாரு என்று மீண்டும் கண்ணனை அடிக்கிறார்.
கதிர் பிரசாந்தை தடுத்து அடிக்கிற வேலைலாம் வேணாம் என்று சொல்ல பிரசாந்த் அங்கிருந்து செல்கிறார். ஜீவா மனமுடைந்து நீ இப்படி எல்லாம் பண்ணிருக்கமாட்டனு காத்திருக்கும் அண்ணா அண்ணிக்கு என்ன பதில் சொல்வேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். வெளியே வந்து கதிரிடம் வீட்டில் என்ன சொல்வது என்று கேட்டு அழுகிறார்.
சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிப்பு? – மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் விளக்கம்!
பின்னர் வீட்டிற்கு வர அனைவரும் கண்ணன் எங்கே என்று கேட்கின்றனர். இருவரும் பதில் சொல்லாமல் இருக்க ஐஸ்வர்யா சித்தி பயங்கரமாக திட்டுகிறார். ஆனால் அப்போதும் கண்ணன் மீது நம்பிக்கையுடன் மூர்த்தியும் தனமும் இருக்க ஜீவா கதிர் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார்.அப்போது அங்கே பிரசாந்த் வந்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் திருமணம் செய்து கொண்டதை சொல்கிறார். அதை கேட்டு மூர்த்தியும் தனமும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!