சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிப்பு? – மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் விளக்கம்!
நாட்டில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் சமூக வலைத்தளங்களை தடி விதிப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், அது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ராஜ்ய சபாவில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள்:
இந்தியாவில் சமீபத்தில் 2021 தகவல் தொழில்நுட்பம் விதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக செய்தி அனுப்பும் ஊடகங்கள் அனைத்தும் நாட்டின் நலனுக்கு நன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலான செய்திகளை அனுப்பும் நபரை கண்டறியும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்டது.
இன்று புதிதாக 6,695 பேருக்கு கொரோனா பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!!
மத்திய அரசின் இந்த புதிய விதிகளை கடைபிடிக்காத சமூக வலைத்தளங்கள் அனைத்தும் நாட்டில் தடை செய்யப்படும் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் மத்திய அரசின் இந்த புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் நடக்கும் ராஜ்ய சபா கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சரிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதற்கு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக வலைதள நிறுவனங்களுடன் மத்திய அரசு அடிக்கடி பேசிவருகிறது. பயனாளர்களின் பாதுகாப்பு உட்பட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்படுகின்றன. மக்களிடம் வெறுப்பையும், வன்முறையையும் துாண்டும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். அரசியல் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் ஒரு போதும் பாதிக்காது. எந்த சமூக வலைதளங்களையும் தடை செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.