கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி, பாரதிக்கு தேவையான ஏற்பாடுகளை செய்யும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று, கொரோனா காரணமாக கண்ணம்மாவின் தெரு அடைக்கப்படுகிறது. பாரதி வீட்டிற்கு செல்ல அவர் மீது ஒருவர் சேறு அடித்துவிடுகிறார். அத்துடன் கண்ணம்மா வீட்டில் தங்க சம்மதம் தெரிவிக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி ஹேமாவை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட, அந்த பக்கம் வருகிற ஒருவர் கொரோனா காரணமாக இந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளதாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். நான் ஒரு டாக்டர் என்னை எப்படி விடாமல் இருப்பாங்க என்று கேட்கலாம் என பாரதி செல்கிறார். அங்கே போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிப்பு? – மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் விளக்கம்!
அவர்களிடம் பாரதி எவ்வளவோ எடுத்து சொல்ல அவர்கள் கொரோனா பரிசோதனை செய்யாமல் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கின்றனர். அப்போது பாரதி ஹேமா, லட்சுமி அங்கே வர ஒரு வண்டி வேகமாக வந்து பாரதியின் மீது சேறு அடித்தது. உடனே குழந்தைகள் பாரதியை கட்டாயப்படுத்தி கண்ணம்மா வீட்டில் தங்க வைக்கின்றனர்.
இன்று புதிதாக 6,695 பேருக்கு கொரோனா பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!!
கண்ணம்மா பாரதியை குளிக்க சொல்ல அவருக்கு தேவையான சோப்பு மற்றும் புது துணிகளை வாங்கி தருகிறார். பிறகு கண்ணம்மா வேலை செய்து கொண்டிருக்கும் போது, கண்ணம்மாவிற்கு தெரியாமல் பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார். இந்த வீட்டில் தங்குவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை என்று நினைத்து கொள்கிறார். பின்னர் மாநகரட்சியில் இருந்து கொரோனா பரிசோதனை செய்ய வருகின்றனர். பாரதி கண்ணம்மாவை, கணவன் மனைவி என நினைத்து விடுகின்றனர். பிறகு பாரதி, கண்ணம்மா, ஹேமா, லட்சுமிக்கு கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!