இன்று புதிதாக 6,695 பேருக்கு கொரோனா பாதிப்பு – மாநில சுகாதாரத்துறை அறிக்கை!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து பாதிப்புகள் அதிக அளவில் பதிவாகி வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தின் கொரோனா பாதிப்புக்கான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதிகரிக்கும் தொற்று:
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவிலான தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் பாதிப்பு பகுதிகளின் நிலவரத்தை பொறுத்து தற்போது பல கட்டங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு விகித்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
கொரோனாவிற்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை தடை செய்ய வேண்டும் – உலக சுகாதார அமைப்பு!
அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,695 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 63,36,220ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,33,530ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 74,995 பேர் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மகாராஷ்டிராவில் இன்று மாட்டும் 7,120 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,24,278ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,89,62,106 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பதிப்பில் முன்னதாக மகாராஷ்டிரா மாநிலம் முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது தீவிர கட்டுப்பாடுகளின் விளைவால் பாதிப்பு குறைந்துள்ளது.