சிக்கலில் சிக்கிய கதிர்.. காப்பற்ற ஓடி வரும் மூர்த்தி.. இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுகின்றனர். மறுபக்கம் பத்திரப்பதிவு நடக்காததற்கு ஜனார்த்தனன் கதிரை குறை சொல்வது மூர்த்திக்கு பிடிக்காமல் இருக்கிறது
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரும் முல்லையும் அடுத்த போட்டிக்கு தயாராகி நிற்கின்றனர். அப்போது முல்லை எதிர் டீம்மில் இருப்பவர்கள் நம்மை முறைப்பதாக சொல்ல, கதிர் அடி வாங்கினால் சரியாகிவிடும் என சொல்கிறார். அப்போது முல்லை நாம ஒழுங்காக வீட்டிற்கு செல்வோம் என சொல்கிறார். பின் போட்டி தொடங்க கதிர் கண்ணை கட்டிக் கொண்டு சமைக்க தொடங்குகிறார். பின் முல்லையும் சமைக்க இருவரும் அருமையாக சமைத்து முடிக்கின்றனர். அதன் பின் நடுவர்கள் கதிர் முல்லை ஜோடி தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதை பார்த்து எதிர் டீம்மில் இருப்பவர்கள் கோவித்து கொள்கின்றனர். மறுபக்கம் மூர்த்தி வீட்டில் இருக்க மீனாவின் அப்பா வருகிறார். கடைக்கு சென்றேன் நீங்க இல்லை அதனால் தான் வீட்டிற்கு வந்தேன் என ஜனார்த்தனன் சொல்கிறார். பின் தனம் அனைவருக்கும் டீ கொடுக்க பத்திரப்பதிவு முடிந்துவிட்டதா என ஜனார்த்தனன் தெரியாதது போல் கேட்கிறார். ஜீவா நடக்கவில்லை என சொல்ல, எனக்கு ஏற்கனவே தெரியும் என்ன பிரச்சனை என கேட்க, கதிர் வரவில்லை என ஜீவா சொல்கிறார். உடனே ஜனார்த்தனன் கதிர் வேண்டும் என்றே செய்து இருப்பான் என சொல்ல, ஆனால் மூர்த்தி அவன் வேண்டும் என்றே செய்திருக்கமாட்டான் என நம்பிக்கையாக சொல்கிறார்.
பிக்பாஸ் ஆயிஷா வாழ்வில் நடந்துள்ள சம்பவம் – அதிர்ச்சி தகவல்கள்!
Exams Daily Mobile App Download
இப்போ பத்திரபதிவிற்கு செலவானது எல்லாம் வீணாகிவிட்டது என ஜனார்த்தனன் சொல்கிறார். ஆனால் மூர்த்தி அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் மீனாவின் அப்பா கிளம்பிவிட, மூர்த்தி ஜீவாவிடம் கதிருக்கு எதோ பிரச்சனை இருக்கிறது. நீ அவனுக்கு போன் செய்து பாரு என சொல்கிறார். ஜீவா அப்படி எதுவும் நடந்திருக்காது என சொல்கிறார். மறுபக்கம் போட்டி நடக்கும் இடத்தில் எதிர் டீமில் இருப்பவர் எப்படி கதிர் முல்லை வெற்றி பெற்றார்களா என கேட்டு பிரச்சனை செய்கிறார்கள். அப்போது எதிர் டீமில் இருப்பவர்கள் கதிர் கையை கால்லை உடைக்க வேண்டும் பேசிக் கொள்ள முல்லை அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
பின் முல்லை அவர்கள் பேசியதை கதிரிடம் சொல்ல வேண்டாம் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. அடுத்து வரும் எபிசோடுகளில் எதிர் டீம் ஆட்களால் கதிர் உயிருக்கு ஆபத்து வர இருக்கிறது.இதை தெரிந்து கொண்ட மூர்த்தி, ஜீவா விரைந்து வந்து கதிரை அவர்களிடம் இருந்து காப்பாற்றுகின்றனர். இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் வர உள்ளது..