பிக்பாஸ் ஆயிஷா வாழ்வில் நடந்துள்ள சம்பவம் – அதிர்ச்சி தகவல்கள்!
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவராலும் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருக்கும் நடிகை ஆயிஷா பற்றிய, அவரது வாழ்வில் நடந்துள்ள விஷயங்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஆயிஷா:
பிக் பாஸ் சீசன் வரலாற்றில் முதல் இரண்டு வாரங்களுக்குள் மற்ற போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளரின் வாழ்கை பயணத்தை விலகும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும். இதன் மூலம் தான் பலரின் வாழ்வில் நம்பமுடியாத வகையில் நடந்துள்ள பல விஷயங்கள் அனைத்தும் தெரியவரும். ஆனால் இந்த சீசன் 6 ல் அனைத்து போட்டியாளர்களும் தங்களது கதையை எப்படியாவது முழுவதுமாக சொல்லிவிட வேண்டும் என்று ஆவலாக இருந்தனர்.
Exams Daily Mobile App Download
ஆனால், நடிகை ஆயிஷா தனது வாழ்வில் நடந்த எந்த விஷயத்தையும் வெளியில் சொல்ல விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இது அனைவர்க்கும் அதிர்ச்சியை அளித்தாலும், அது அவரது விருப்பம் என்று விட்டுவிட்டனர். ஆனால், அவரது முன்னாள் காதலர் தேவ் என்பவர் ஆயிஷாவை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார். அதாவது 16 வயதிலேயே முதலாவதாக ஆயிஷாவிற்கு திருமணம் முடிந்ததாகவும், அதன்பின்னர் அது விவாகரத்து ஆனபின்னர் 18 வயதில் 2 வது திருமணம் நடந்து அது முடிவிற்கு வந்த பின்னர், சென்னைக்கு படிக்க வந்த போது தான் தேவ் என்பவரை காதலித்து, அவர் மூலம் சீரியல் வாய்ப்புகளை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
கோபியை கண்கலங்க வைத்த மயூ.. அதிர்ச்சியில் ராதிகா – வெளியான “பாக்கியலட்சுமி” ப்ரோமோ!
Follow our Instagram for more Latest Updates
மேலும், தற்போது அவரை விடுத்து யோகேஷ் என்பவருடன் இருப்பதாகவும், அதனால் தான் கழுத்தில் அவரது தாலி போன்ற செயினில் ‘Y ‘ என்ற எழுத்தை அணிந்திருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் அனைத்தும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.