அண்ணன் தான் மளிகை பொருள் அனுப்பியது என தெரிந்து கதறி அழும் கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் காசு இல்லை என நினைத்து வருத்தத்தில் இருக்கும் போது மளிகை பொருள்கள் வந்து இறங்குகிறது. அதில் அண்ணா கையெழுத்து இருப்பது அழுகிறார். பின்னர் தனத்திற்கு பிரசவத்திற்கான பொய் வலி வருகிறது. ‘
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்கிவிட்டோம் ஆனால் சமையல் செய்ய எதுவும் வாங்கவில்லை என பேசிக்கொள்கின்றனர். இந்த பொருள்கள் வாங்கவே எல்லா காசும் முடிந்துவிட்டது. எவ்வளவு தான் நண்பர்களிடம் கேட்க முடியும் என சொல்கிறார். பின்னர் தன்னிடம் 100 ரூபாய் தான் இருக்கிறது என சொல்ல, வீட்டு வாசலில் முறைவாசல் செய்ய ஒருவர் காசு கேட்டு வருகிறார்.
பின்னர் அந்த காசையும் கொடுத்துவிட்டு இருக்கின்றனர். ஐஸ்வர்யா தனக்கு நாப்கின் வாங்க வேண்டும் என சொல்ல கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார். அப்போது வீட்டு வாசலில் மளிகை பொருள்கள் வந்து இறங்குகிறது. கண்ணன் யார் அனுப்பியது என்று கேட்க உங்களை வீடு எடுத்து தங்கவைத்த அண்ணாச்சி தான் அனுப்பினார்கள் என்று சொல்கிறார். கண்ணன் உள்ளே வைத்து திறந்து பார்க்க ஒரு மாதத்திற்கு தேவையான பொருள்கள் உள்ளது.
ஐஸ்வர்யாவிற்கு தேவையான நாப்கின் இருக்கிறது. பிறகு கண்ணன் அதில் இருக்கும் சீட்டை எடுத்து பார்க்க அதில் அண்ணனின் கையெழுத்து இருப்பதாய் பார்த்து அழுகிறார். பார்த்தியா என் அண்ணனுக்கு எவ்வளவு பாசம் என சொல்லி அழுகிறார். தனத்தின் அம்மா முல்லை மீனா மருத்துவமனை செல்ல தேவையான பொருள்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். தனம் ரொம்ப வலிக்குமா என கேட்கிறார். பயப்படாதீங்க நாங்க இருக்கோம் என்று முல்லை சொல்கிறார்.
நடிகை மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு – உத்தரவு!
வலிக்குமா என்று அவங்ககிட்ட கேட்காதீங்க அவங்க குழந்தை பெற்று 35 வருடம் ஆச்சு, நான் தான் சமீபத்தில் குழந்தை பெற்றேன் என சொல்கிறார். பின்னர் தனத்தின் அம்மா ரொம்ப வலிக்கும் எப்படி மறக்க முடியும் என சொல்கிறார். அதுவும் ஜனாவிற்கு வலி தெரியவில்லை. உனக்கு தான் ரொம்ப வலி என சொல்கிறார். அதை கேட்டு தனம் பயப்படுகிறார்.
பின்னர் தனம் வலியில் கத்துகிறார். எல்லாரும் சென்று என்னாச்சு என்று கேட்க சிறிது நேரத்தில் வலி குறைகிறது. தனத்தின் அம்மா இது பொய் வலி தான் நடந்தால் சரியாகிவிடும் என சொல்கிறார். பின்னர் தனமும் நடக்கிறார். மூர்த்தி ஜீவா கதிர் வர, முல்லை அக்காவிற்கு வலி வந்தது என சொல்கிறார். மூர்த்தி வலி வந்தால் மருத்துவமனை செல்வோம் என சொல்ல அதெல்லாம் ஒன்றுமில்லை பொய் வலி தான் என தனத்தின் அம்மா சொல்கிறார். பொய் வலி என்றாலும் வலிக்கும் என்று ஜீவா சொல்ல, எனக்கும் அப்படி தான் வலிச்சது என மீனா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.