நடிகை மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு – உத்தரவு!
பிக்பாஸ் புகழ் நடிகை மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்படுவதாக சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு :
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ்- 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமடைந்தவர் நடிகை மீரா மிதுன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனை அடுத்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், இவருக்கும், சர்ச்சைக்கும் பஞ்சமில்லை என்ற அளவில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வந்தார். இதையடுத்து தனது சமூக வலைதளத்தில் ஆபாசம் நிறைந்த போட்டோக்களை பதிவிட்டு மக்களின் பேசு பொருளாகவும் இருந்து வந்தார்.
விஜய் டிவி VJ அர்ச்சனாவின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய நிலை – ரசிகர்களுடன் பகிர்வு!
இதனை அடுத்து, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை பதிவிட்டார். அதில் குறிப்பிட்ட சாதியினர் அதாவது பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியதோடு, அந்த ஜாதியைச் சார்ந்த திரைப்பட இயக்குனர்கள், நடிகர், நடிகைகளை பற்றி இழிவான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனை அடுத்து,கடந்த 7ம் தேதி நடிகை மீரா மிதுன் பற்றி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, புகார் அளித்தாா்.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து இந்த வழக்கில் நடிகையோடு தொடர்புடைய அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இவர்கள் மீது எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர் மீதான ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் இவர்களுக்கான நீதிமன்ற காவலை செப்.9 வரை நீட்டிப்பதாக சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.