பொங்கல் சீரை வைத்து சண்டையிடும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா & ஐஷு – அடுத்தடுத்த திருப்பங்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பொங்கல் கொண்டாட்டம் நடந்து வருகிறது. இது தொடர்பான காட்சிகள் தான் கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்த வாரத்தில் பொங்கல் சீரை வைத்து மீனா & ஐஷு இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.
பொங்கல் கொண்டாட்டம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதைப்படி லட்சுமி அம்மா சமீபத்தில் தான் இறந்து விட்டது போல் உள்ளதால், மூர்த்தி குடும்பத்தினர் பொங்கல் வைக்க முடியாது என்று பேசி வருகின்றனர். ஆனால் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் தங்கள் வீட்டில் வந்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தி அழைக்கிறார். முதலில் தயங்கிய மூர்த்தி அனைவரும் கேட்டுக் கொண்டதால் பின்னர் ஜனார்த்தனன் வீட்டிற்கு பொங்கல் கொண்டாட செல்ல சம்மதித்து விட்டார்.
விஜய் டிவியில் “ஈரமான ரோஜாவே” சீசன் 2 சீரியல் – இன்று முதல் ஒளிபரப்பு!
மீனாவின் வீட்டிற்கு ஜீவா, மீனா, தனம், மூர்த்தி, கயல் பாப்பா, முல்லை, கதிர் இவர்கள் அனைவரும் செல்கின்றனர். கண்ணன் மற்றும் ஐஷு இருவரும் தல பொங்கலை கொண்டாட ஐஷுவின் பாட்டி வீட்டிற்கு செல்கின்றனர். இந்த காட்சிகள் கடந்த வரம் வரை ஒளிபரப்பாகியுள்ள நிலையில், தற்போது பொங்கல் முடிந்து அனைவரும் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் குறித்து தான் தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்கள் – ஷாக் ரிப்போர்ட்!
அதில் ஐஷு எதேச்சையாக தங்கள் வீட்டில் பாயசம், பருப்பு என்று வெரைட்டியாக சமைத்ததாக கூற, உடனே மீனா எங்க வீட்ல ஸ்வீட்ல மட்டும் 4 வகை வைச்சாங்க, எல்லாம் வெரைட்டியா பண்ணி வச்சாங்க, சாப்பிடவே 1 மணி நேரம் ஆச்சு என்று பதிலுக்கு கூறுகிறார். இதனால் ஜீவா இப்போ உன்ன கேட்டாங்களா என்று கேட்கிறார். இவளே இவ்ளோ சொல்லும் போது நான் சொல்லக் கூடாதா என்று மீனா கேட்கிறார். அப்படியே பலகாரம், டிரஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதனால் இந்த காட்சிகள் வரும் எபிசோடுகள் அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என்பது தெளிவாகிறது.