பிரெஞ்சு ஒபெனில் நோவக் ஜோகோவிச்சுக்கு அனுமதி இல்லை – பிரான்ஸ் அமைச்சகம் அறிவிப்பு!
நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி இல்லை என்று பிரான்ஸ் நாடு அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அமைச்சகம் அறிவிப்பு:
ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒன்பது முறை சாம்பியன் பட்டத்தை வென்றவர். கடந்த மூன்று வருடங்களில் தொடர்ந்து மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றார். இதுவரை மொத்தம் 20 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் டென்னிஸ் வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற வீரர்கள் பட்டியலில் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகிய வீரர்களோடு நோவக் ஜோகோவிச் இணைந்தார்.
RBI வங்கியில் மாதம் ரூ.90,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
பிரான்ஸ் நாட்டில் உணவகங்கள், கஃபேக்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள் மற்றும் போன்ற பொது இடங்களில் நுழைய தடுப்பூசி சான்றிதழை மக்கள் பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும் என்று புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களுக்கு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை ஜனவரி 17 ஆம் தேதி பிரான்ஸ் அரசு அறிவித்தது.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஜாக்பாட் – கேம்பஸ் இன்டெர்வியூ! 142 நிறுவனங்கள் பங்கேற்பு!
மேலும் நோவக் ஜோகோவிச் பிரான்ஸ் விசா ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் ஆஸ்திரேலியாவில் இருந்த நோவக் ஜோகோவிச் தற்போது அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மருத்துவ அதிகாரிகளும், நண்பர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு நோவக் ஜோகோவிச்சிடம் வலியுறுத்தி வருகின்றனர்.