“பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர்கள் – ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 5” நிகழ்ச்சியின் இறுதி சுற்று நேற்று நடந்து முடிந்துள்ளது. அதில் ராஜு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இதுவரை அதிகமான சம்பளம் வாங்கிய போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் போட்டியாளர்கள்:
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 105 நாட்களாக வெற்றி நடை போட்டது. இந்த சீசனில் கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் 18 புது முகங்கள் களமிறங்கினர். அவர்களில் தற்போது மக்கள் மனம் கவர்ந்த சிலர் பிரபலமாகி இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. அதில் ராஜு, அமீர், பாவ்னி, பிரியங்கா, நிரூப் ஆகியோர் இறுதி சுற்றில் இருந்தார்கள். அதில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் முதல் இடத்தை ராஜு பிடித்தார்.
‘பாரதி கண்ணம்மா’ தொடரில் மீண்டும் களமிறங்கும் ரோஷினி ஹரிப்ரியன் – ரசிகர்கள் ஆரவாரம்!
அவருக்கு பிக்பாஸ் கோப்பையும், டைட்டிலும், பரிசு தொகை ரூ. 50 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் அவர் 105 நாட்கள் வீட்டிற்குள் இருந்ததற்கு வாரம் ரூபாய் 70000 என தற்போது ரூ. 21 லட்சம் சம்பளத்துடன் சேர்த்து. ரூ71 லட்சத்துடன் வெளியேறி இருக்கிறார். அவரை தவிர அதிக சம்பளம் வாங்கிய இறுதி சுற்று போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இரண்டாம் இடத்தை பிடித்த பிரியங்கா ரூ. 28 லட்சத்து 25 ஆயிரம் பணத்துடன் வெளியேறி இருக்கிறார்.
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
அடுத்ததாக பாவனி ரூ. 20 லட்சத்து 17 ஆயிரம் பணத்துடனும், அமீர் ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் பணத்துடனும், நிரூப் ரூ. 11 லட்சத்து 20 ஆயிரம் பணத்துடனும் வெளியேறி இருக்கிறார்கள். இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று முதல் ஒளிபரப்பாகாது என்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் பிக்பாஸ் ஓடிடி விரைவில் தொடங்க இருப்பதால் ரசிகர்கள் சற்று நிம்மதியில் உள்ளனர்.