விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக களமிறங்கிய புதிய நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணி விலக இருப்பதாகவும் அவருக்கு பதிலாக புதிய நடிகை ஒருவர் களமிறங்கி இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் TRPயில் போட்டி போடும் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசமும், மூத்த அண்ணி தனது கொழுந்தன் அனைவரையும் பெற்ற பிள்ளை போல வளர்த்து ஆளாக்குவதும், அவர்களுக்கு திருமணம் முடிந்து குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வது என பொறுப்பான அண்ணியாக இருக்கிறார். இந்நிலையில் கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணத்தால் இப்படி பாசமாக இருக்கும் குடும்பத்தில் பூகம்பம் வருகிறது.
ரோஷினி, மனோபாலா & அம்மு அபிராமியுடன் துவங்கும் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 – வைரலாகும் வீடியோ!
இதுவரை மூன்று மருமகள்களும் அனுசரித்து வாழ புதிதாக வந்த ஐஸ்வர்யா மட்டும் அனைத்து அண்ணிகளுடன் சண்டை போடுகிறார். இந்நிலையில் அடுத்து அடுத்து சுபகாரியங்களாக நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது புதிய மாற்றம் ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது முல்லை கதாபாத்திரம் மீண்டும் மாற்றப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்து வந்தார். அவர் மறைவுக்கு பின் முல்லையாக பாரதி கண்ணம்மா அறிவுமணி களமிறங்கினார்.
பரணி, வனிதா & ஜூலி கலந்து கொள்ளும் ‘பிக் பாஸ்’ அல்டிமேட் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
அவரை முல்லையாக ஏற்றுக் கொண்டு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதால் நல்ல கதை வந்தால் சீரியலில் இருந்து விலகுவேன் என தெரிவித்தார். தற்போது அவர் சீரியலில் இருந்து விலகி வேறு ஒரு நடிகை சீரியலில் களமிறங்கி இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.