அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஜாக்பாட் – கேம்பஸ் இன்டெர்வியூ! 142 நிறுவனங்கள் பங்கேற்பு!
அண்ணா பல்கலை வளாகத்தில் வேலைவாய்ப்பு சலுகைகள் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு 40% வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது ஆன்லைன் வாயிலாக வளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெறுவது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிலும் பொறியியல் படிப்பை முடித்து பல கனவுகளுடன் வெளியே வரும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா பெருந்தொற்றால் படித்த இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தேடி அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் பொறியியல் படிப்பு படித்தால வேலை கிடைக்காது என்ற மனநிலைக்கு மாணவர்கள் வந்துவிட்டனர். நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. 70,000 இடங்கள் நிரப்பப்படாமலே இருந்தது.
சென்னை வானிலை மையத்தின் புதிய இயக்குனராக செந்தாமரை கண்ணன் – விரைவில் பதவி ஏற்பு!
இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வளாக நேர்காணலுக்கு (கேம்பஸ் இன்டர்வியூ) ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் நேர்காணலை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலால் ஆன்லைன் வாயிலாக வளாக நேர்காணல் நடந்து வருகிறது. அதே போல நடப்பாண்டும் வளாக நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வளாக நேர்காணலில் இதுவரை 142 நிறுவனங்கள் பங்கேற்று 1,700 வேலைவாய்ப்பு சலுகைகளை வழங்கி இருக்கின்றன.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் முக்கிய அம்சங்கள்!
இது மேலும் அதிகரித்து 2 ஆயிரம் வேலைவாய்ப்பு சலுகைகள் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2022ம் ஆண்டு 40% வேலைவாய்ப்பு அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த சுமார் 95 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளான கிண்டி இன்ஜினியரிங் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு கல்வி நிறுவனம் ஆகியவையில் பயில கூடிய மாணவர்கள் வளாக நேர்காணலில் பங்கேற்று வருகின்றனர் என்று பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.