‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – முல்லையை பிரியும் கதிர்? ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிர் மற்றும் முல்லைக்கு குழந்தை பிறப்பது சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் வேளையில், இதன் அடுத்த திருப்பமாக கதிர் முல்லையை விட்டு பிரிய இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீப காலமாக பல்வேறு பாசப்போராட்டங்கள் நிறைந்த கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தற்போதைய கதைக்களத்தில் முல்லைக்கு இயற்கையாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், குழந்தை பிறப்பதற்காக அடுத்த கட்ட ட்ரீட்மெண்ட் எடுப்பது பற்றி வீட்டில் அனைவரும் யோசித்து கொண்டிருக்கின்றனர்.
இதற்காக வீடு கட்டும் முடிவை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடலாம் என்றும் முடிவு செய்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். இப்போது முல்லையின் சிகிச்சைக்காக வீடு கட்டுவதை தள்ளிப்போடுவது சரியில்லை என மீனா கருதுகிறார். இதற்கிடையில் முல்லைக்கு சிகிச்சை நடக்குமா, குழந்தை பிறக்குமா என்ற எதிர்பார்ப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். இப்படி இருக்க இந்த சீரியலின் 2ம் பாகம் விரைவில் எடுக்கப்பட இருப்பதாக ஷாக்கிங் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் 2ம் பாகத்தில் கதிர் மற்றும் முல்லை இருவரும் பிரிந்து இருப்பதாகவும் இவர்களை வைத்து தான் ஒட்டு மொத்த கதைக்களமும் நகரும் என சொல்லப்பட்டு வருகிறது. குறிப்பாக, கதிருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகப்போவதாகவும், கதிரை முல்லை பழிவாங்க இருப்பதாகவும் தகவல்கள் கூறுகிறது. இந்த தகவல் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலுக்கு சற்று கூட பொருத்தமில்லாத கதைக்களமாக இருந்தாலும் இதுபோன்ற காட்சிகள் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.