“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாகும் முல்லை, மகிழ்ச்சியில் குடும்பம் – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இந்த வாரம் சந்தோஷமான செய்தி ஒன்று வர இருக்கிறது. டிரீட்மென்ட் எடுத்த முல்லை கர்ப்பமாக இருப்பதாக ரிசல்ட் வருகிறது. அதை நினைத்து குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கூட்டு குடும்பத்தில் உள்ள ஒற்றுமையை பற்றி கதை இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக கதிர் முல்லையை சுற்றியே கதை இருந்தது, முல்லை குழந்தை இல்லாமல் வருத்தப்பட கதிர் எவ்வளவு ஆறுதல் சொல்லியும் கூட அவருக்கு சமாதானம் ஆகவில்லை. அதனால் முல்லை கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்கிறார். அதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் வருத்தப்படுகின்றனர். முல்லை மீண்டும் கஷ்டப்படக் கூடாது என்பதால் மூர்த்தி கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்க சொல்கிறார்.
கதிர் அதிகமான பணத்தை மருத்துவமனையில் கட்ட அதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார். மறுபக்கம் மீனாவும் ஐஸ்வர்யாவும் இவ்வளவு கடன் வாங்கி செலவு செய்ய வேண்டுமா என கேட்டு வருத்தப்படுகிறார். இந்நிலையில் இந்த வார எபிசோடில் முல்லை டிரீட்மென்ட் முடிந்து இருக்க கதிர் அவரை மிகவும் அன்பாகவும் அக்கறையுடனும் கவனித்து கொள்கிறார். முல்லையை எந்த வேலையும் செய்ய விடாமல் நடக்க கூட விடாமல் அக்கறையாக பார்த்துக் கொள்கிறார்.
ExamsDaily Mobile App Download
அதன் காரணமாக ஒரு நல்ல செய்தி வரப் போகிறது. கஷ்டப்பட்டு பரிகாரம் செய்த முல்லைக்கு கடவுளின் அருளால் குழந்தை கிடைக்கப் போகிறது. முல்லை கர்ப்பமாக அதை நினைத்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். மேலும் முல்லை குழந்தை பிறக்க போகிறது என்ற சந்தோஷத்தில் இருக்கிறார். மீனாவிற்கு செலவு செய்ததில் வருத்தம் இருந்தாலும் முல்லைக்கு நல்ல செய்தி வந்துள்ளதை நினைத்து சந்தோசப்படுகிறார். அதனால் முல்லையை அனைவரும் அரவணைத்து பார்க்கின்றனர்.