வெண்பா கனவில் மண்ணை போட்ட ஷர்மிளா, திருமணத்திற்கு ரெடியான மாப்பிள்ளை – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கதையில் பெரிய மாறுதல் வந்துள்ளது. பாரதியை திருமணம் செய்ய வேண்டும் என வெண்பா காத்திருக்க, ஆனால் அவரது கனவில் மண்ணை அள்ளி ஷர்மிளா போட்டிருக்கிறார். நாளைய எபிசோடில் வெண்பாவிற்கு பொருத்தமான மாப்பிள்ளையை ஷர்மிளா கூட்டிக் கொண்டு வருகிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில் இதுவரை ஹேமா லட்சுமியை பற்றியே கதை இருந்தது. லட்சுமிக்கு தன்னுடைய அப்பா யார் என தெரிந்தும் கூட இன்னும் அமைதியாக இருக்கிறாள். தற்போது அந்த கதை எல்லாம் விட்டுவிட்டு வேறு ஒரு கதைக்களத்திற்குள் சீரியல் சென்றுள்ளது. இனிமேல் பாரதியும் கண்ணம்மாவும் ஒரே மருத்துவமனையில் வேலை செய்ய இருக்கின்றனர். அதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்தாலும் கண்ணம்மாவை பற்றி பாரதி முழுமையாக புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்க போகிறது.
ExamsDaily Mobile App Download
இந்நிலையில் பாரதியும் கண்ணம்மாவும் சேர்வார்களா என எதிர்பார்த்தது போய் வெண்பாவிற்கு பெரிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது, அது தான் அவருடைய அம்மா ஷர்மிளா. பிடிவாதம் செய்யும் வெண்பாவிற்கு மேல் அவரது அம்மா பிடிவாதமாக இருக்கிறார். எப்படியாவது வெண்பா மனதை மாற்றி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குறிக்கோளுடன் இருக்கிறார். ஆனால் வெண்பா பாரதி மீது காதலுடன் இருக்க என்ன நடந்தாலும் பாரதி திருமணம் செய்து கொள்ளமாட்டார் என தெரிந்தும் வெண்பா காத்திருக்கிறார்.
வெண்பாவிற்கு போலீஸ் பிரச்சனை ஒன்று வர அதை தனக்கு சாதகமாக்கிய ஷர்மிளா வெண்பாவை தான் பார்க்கும் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்ய ஒப்புக் கொள்ள சொல்கிறார். அதற்கு வெண்பா வேறு வழியில்லாமல் ஒப்புக் கொள்ள நாளைக்கே உன்னை பெண் பார்க்க வருவதாக அவர் சொல்கிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் வெண்பாவை திருமணம் செய்து கொள்ளப் போவது யார் என்பது எல்லாம் இனி வரப் போகும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.