கோலத்தை அழித்து ஐஸ்வர்யாவிடம் தானாகவே சென்று சிக்கும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோடு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யா போட்ட கோலத்தை தெரியாமல் அளித்து விட்டு மீனா தானாகவே வம்பில் சிக்குவதை போல சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகள் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மக்களின் மனதுக்கு ஏற்ற கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடை திறப்பு விழா எல்லாம் சிறப்பாக முடிந்து, இந்த கதைக்களம் தற்போது வழக்கமான பாணிக்கு திரும்பி இருக்கிறது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை திறப்பு விழாவில் பிசியாக இருந்த வீடு மீண்டும் மீனா, ஐஸ்வர்யா மோதல்களில் களைகட்டி வருகிறது. அந்த வகையில் மீனா சொன்ன வார்த்தைக்காக கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று ஐஸ்வர்யா அடம்பிடிக்க, இதற்கு காரணம் மீனா தான் என்று முல்லை மற்றும் தனம் இருவரும் அவரை குறை கூறுகிறார்கள்.
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘கச்சா பாதாம்’ பாடகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இதனை கேட்டு பெரிய சண்டை இல்லாமல் ஒரு வழியாக சமாதானம் ஆகி இருக்கும் மீனா, மீண்டுமாக தானாகவே சென்று ஒரு சிக்கலுக்குள் மாட்டி இருக்கிறார். அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கூட்டி பெருக்கி வீட்டு வாசலில் கோலம் போட்டுவைக்க, தூக்க கலக்கத்தில் வரும் மீனா தெரியாமல் அந்த கோலத்தின் மீது தண்ணீரை ஊற்றி அழித்து விடுகிறார். பிறகு கண் விழித்து பார்க்கும் போது அங்கு ஏற்கனவே கோலம் போட்டிருப்பதை அறிந்துகொள்கிறார்.
முதல் மாத திருமண நாளை கொண்டாடிய ‘கயல்’ சீரியல் நாயகி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
தொடர்ந்து ஐஸ்வர்யா தான் இந்த கோலத்தை போட்டிருப்பாள். அதனால் அதனை சரி செய்து விடுவோம். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சனை ஆகிவிடும் என்று கோலத்தின் மீது சில வேலைப்பாடுகளை செய்ய பார்க்கிறார். ஆனால் எதுவும் சரியாகவில்லை. இப்போது என்ன செய்வதென்று யோசிக்கும் மீனா, அந்த கோலத்தை மொத்தமாக அழித்துவிட்டு புதிய கோலத்தை போட்டு விடுகிறார். இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் மீண்டும் ஐஸ்வர்யா மற்றும் மீனாவின் சண்டைகள் எழத்துவங்கியுள்ள நிலையில் வழக்கமான ஃபன் மற்றும் கலாட்டாக்களை எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள்.