விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ‘கச்சா பாதாம்’ பாடகர் – ரசிகர்கள் அதிர்ச்சி!
உலகம் முழுவதுமே படு வைரலாகி கொண்டிருக்கும் கச்சா பாதாம் என்னும் பாடலை பாடிய பூபன் பத்யாகர் தற்போது விபத்து ஒன்றில் சிக்கி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்படி வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கச்சா பாதாம் பாடல்
வட இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான கச்சா பாதாம் என்கிற பாடல் யூடியூப் பக்கத்தையே அதிர வைத்தது. இந்த பாடல் வெளியாகி சில மணி நேரத்திலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. அதாவது இந்த பாடலை பாடியவர் ஒரு பாதாம் வியாபாரி. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரல்ஜூரி என்ற கிராமத்தில் பூபன் பத்யாகர் என்பவர் சைக்கிளில் பாதாம் விற்று வருகிறார்.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்ன?
தான் பாடும் பாட்டை கேட்டு மக்கள் தான் விற்கும் பாதாமை வாங்க வேண்டும் என்கிற நோக்கில் பாடியுள்ளார். இவர் பாடிய கச்சாபாதாம் என்கிற பாடல் மிக பெரிய அளவில் ரீச் ஆகி பூபன் பத்யாகருக்கு பெயரையும் புகழையும் பெற்று கொடுத்துள்ளது. தான் பாடிய முதல் பாடலே இவ்வளவு பெரிய அளவில் ரிச் ஆகும் என கனவில் கூட பூபன் பத்யாகர் நினைக்கவில்லை. தற்போது எதிர்ப்பாராத விதமாக பூபன் பத்யாகர் பாடிய கச்சாபாதாம் பாடல் எட்டுத்திக்கும் ஒலித்து கொண்டிருக்கிறது.
முதல் மாத திருமண நாளை கொண்டாடிய ‘கயல்’ சீரியல் நாயகி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
தற்போது பாதாம் விற்பதை நிறுத்திவிட்டு முழு நேரமாக பாடலை பாடலாம் என பூபன் பத்யாகர் முடிவு செய்துள்ளார். ஒரே பாடல் மூலமாக வெற்றியின் உச்சத்திற்கு சென்ற இவர் தற்போது ஒரு விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். மேற்கு வங்கத்தில் தனது வாகனத்தை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக வாகனம் சுவரில் மோதியது. இதனால் முதுகில் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறு காயம் என்பதால் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.