முதல் மாத திருமண நாளை கொண்டாடிய ‘கயல்’ சீரியல் நாயகி – ரசிகர்கள் வாழ்த்து மழை!
கயல் சீரியலில் நடித்துவரும் அபிநவ்யா சீரியல் நாயகனான தீபக்கை ஜனவரி 27 ஆம் தேதி அன்று திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது முதல் மாத திருமண நாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
முதல் மாத திருமண நாள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கயல் சீரியலில் நடித்ததன் மூலமாக மக்களின் மத்தியில் பிரபலமானவர் தான் அபிநவ்யா. கயல் சீரியலில் மட்டுமல்லாமல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் கண்மணி, ப்ரியமானவள் சீரியலிலும் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சித்திரம் பேசுதடி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிவா மனசுல சக்தி போன்ற சீரியல்களிலும் அபிநவ்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
கோபி – ராதிகாவின் திருமணத்திற்கு குடும்பத்துடன் தயாராகும் பாக்கியா? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
இவர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”என்றென்றும் புன்னகை” என்கிற சீரியலில் நடித்த தீபக் என்பவரை ஒரு ஆண்டுகளுக்கு மேலாகவே காதலித்து வந்தார். இவர்கள் ஜனவரி 27 ஆம் தேதி அன்று பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன்னாடி இருந்தே இருவரும் ஒன்றாக இணைந்து ரீல்ஸ் செய்து அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர்.
கலர்ஸ் தமிழ் “அபி டெய்லர்” சீரியல் ரேஷ்மா முரளிதரன் யார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!
திருமணத்திற்கு பிறகும் அவ்வப்போது இருவரும் இணைந்து ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். தற்போது திருமணமாகி முதல் மாத திருமண நாளை இருவரும் விமர்சையாக கொண்டாடியுள்ளனர். அபிநவ்யா தனது காதல் கணவரான தீபக்கிற்கு ஹேப்பி முதல் மாத அனிவர்ஸரி புட்டா என வாழ்த்தியுள்ளார். ரசிகர்கள் பலரும் முதல் மாத திருமண நாளிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்