Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

0
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு - முழு விவரம் இதோ!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க விரும்புவோர் கவனத்திற்கு – முழு விவரம் இதோ!

அஞ்சல் நிலையத்தின் உள்ள செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளுக்கு உதவ கூடிய எதிர்கால திட்டமாக உள்ளது. இத்திட்டத்தின் வட்டி விகிதம், முதிர்வு காலம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

அஞ்சல் துறை மக்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி அதை செயல்படுத்தியும் வருகிறது. ரிஸ்க் இல்லாமல் பாதுகாப்புக்காக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலகத் திட்டங்கள் கை கொடுக்கும். வைப்பு நிதி, தொடர் வைப்பு கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம், செல்வ மகள் திட்டம், போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் அதிக வட்டி விகிதம் கிடைப்பதால் சாமானிய மக்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகத்தின் முடிவு என்ன?

மற்ற திட்டங்களை தொடர்ந்து அஞ்சலத்தில் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசால் கடந்த 2015ம் ஆண்டு செல்வ மகள் சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கான எதிர்கால திட்டமாக உள்ளது.10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் பேரில் இத்திட்டத்தை தொடங்கலாம். செல்வ மகள் சேமிப்பு அக்கவுண்ட்டை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு அல்லது ஒரு தபால் நிலையத்திற்கு மாற்றி கொள்ளும் வசதியும் உள்ளது. ஒரு குடும்பத்தில் இரண்டு செல்வமகள் சேமிப்பு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்.

TNPSC தேர்விற்கு படித்து வருபவரா? – இதோ உங்கள் கவனத்திற்கு..!

குறைந்த பட்சம் 250 ரூபாய் கொண்டு இத்திட்டத்தை தொடங்கலாம். மேலும் அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வைப்பு தொகை செலுத்தலாம் இந்த திட்டத்தில் முதலீடு கால திட்டம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாக உள்ளது. ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அஞ்சலகத்தில் உள்ள மற்ற திட்டங்களை விட இந்த சேமிப்பு திட்டத்தில் தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது. கணக்கு தொடங்கப்பட்ட பெண் குழந்தைக்கு 18 வயது ஆகும் போது 50% பணத்தை எடுக்கலாம். மீத தொகையை திருமணத்தின் போது எடுத்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!