‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா – புதிய அறிமுகம்! வைரலாகும் ப்ரோமோ!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா - புதிய அறிமுகம்! வைரலாகும் ப்ரோமோ!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா - புதிய அறிமுகம்! வைரலாகும் ப்ரோமோ!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா – புதிய அறிமுகம்! வைரலாகும் ப்ரோமோ!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சூப்பர் ஹிட் சீரியல் மூலம் மக்களுக்கு பரீட்சயமாகி இருக்கும் நடிகை ரக்ஷிதா தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக அறிமுகம் ஆவதை போல வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பொதுவாக சீரியல்களில் வித்தியாசமாக ஒளிபரப்பப்படும் கதைக்களத்திற்கு எப்போதுமே மக்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கம். இதற்காக சீரியல் இயக்குனர்கள் நிறைய மெனக்கெட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி புதிய புதிய கதைகளை அமைத்து வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் ரசிகர்களை திருப்திபடுத்துகிறதா என்று கேட்டால் அது சற்று சந்தேகமான விஷயம் தான். இருந்தாலும் நம் அன்றாட வாழ்க்கையில், ஒரு குடும்பத்தில் நடக்கும் வழக்கமான விஷயங்களை மையமாக வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்களின் மனம் கவர்ந்த ஒன்றாக இருக்கிறது.

பணம் இல்லாமல் கஷ்டப்படும் பாக்கியா, செழியனிடம் சண்டை போடும் ஜெனி – இன்றைய எபிசோட்!

இன்றைய கால கட்டத்தில் நம்மால் அதிகம் காண முடியாத ஒரு கூட்டு குடும்ப பின்னணியை வைத்து தயாரிக்கப்பட்டு வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் இதுவரை 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஐய் டிவியில் ஒவ்வொரு நாளும் பிரைம் நேரத்தில் வெளியாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ரசிகர்களின் ஆதரவை சம்பாதித்து இருக்கிறது. இப்படி இருக்க, இந்த சீரியலில் நீண்ட நாட்கள் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு எல்லா பிரச்சனைகளையும் கடந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை மீட்டு, கடை திறப்பு விழாவையும் கொண்டாடி உள்ளனர் மூர்த்தி குடும்பத்தினர்.

கைலாஷ் உடன் சேர்ந்து தண்ணீ அடித்த ஜீவா, நீண்ட நேரம் காத்துக் கொண்டிருக்கும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

இதனை தொடர்ந்து தற்போதைய கதைக்களத்தில், கடை திறப்பு விழா நிகழ்வை அனைவரும் மது அருந்தி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகை ரக்ஷிதா புதிய அறிமுகமாக களமிறங்க இருப்பதாக எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக இத்தொடரில் மீனாவின் அண்ணன் கைலாஷ், கிராம அதிகாரி உள்ளிட்ட பல புதிய முகங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வர, இந்த பட்டியலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ ரக்ஷிதா இணைவது போல வெளியான ப்ரோமோ தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!