மீனா அறையில் கண்ணன், ஐஸ்வர்யாவை தங்க வைக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா கண்ணனை வீட்டிற்கு அழைத்து வர அவர்களை எந்த ரூமில் தங்க வைப்பார்கள் என தெரியாமல் மீனா குழப்பத்தில் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல திருப்பங்கள் தற்போது நடந்துள்ளது. கண்ணன் அடிபட்டு இருக்க அதை தெரிந்து கொண்ட தனம் அம்மா வீட்டில் இருந்து வந்து அவனை பார்த்துக் கொள்கிறார். பின் மூர்த்தி உதவி செய்ததுடன் நிறுத்திக் கொள் என சொல்ல, கோவப்பட்ட தனம் மூர்த்தியிடம் கண்ணனை இப்படியே விட முடியாது என சொல்கிறார். ஆனால் மூர்த்தி கேட்காமல் இருக்க, கோவப்பட்ட தனம் உங்க பேச்சை நான் ஒரு நாளும் மீறியது இல்லை. ஆனால் இப்போது நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் என சொல்லி கண்ணனை அழைத்து வருகிறார்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிருடன் இணைந்த கண்ணன் – வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!
கண்ணனும் ஐஸ்வர்யாவும் இனிமேல் இங்கே தான் தங்க போகிறார் என சொல்ல, மூர்த்தி மனதிற்குள் சந்தோசமாக தான் இருக்கிறார். பின் ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சாப்பாடு செய்து கொடுக்கிறார். தனம் ஐஸ்வர்யாவை பெருமையாக பேசி மீனாவை அவமானப்படுத்துகிறார். அதனால் மீனா கோவமாக இருக்க ஐஸ்வர்யா செய்ததை குறை சொல்கிறார். பின் தனம் அவர்களை எங்கே தூங்க வைப்பது என கேட்க, மீனா இங்கே இருந்தால் நம்ம ரூமை கேட்பார்கள் என நினைக்கிறார்.
சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இருந்து விலகும் முக்கிய நடிகர் – ரசிகர்கள் ஷாக்!
அவர் கயல் அழுது கொண்டே இருக்கிறாள் என சொல்லி வேகமாக சென்று கயலை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து தூங்க வைக்கிறார். பின் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க, மீனா நம்ம ரூமை தான் கேட்கிறார்கள் போல என நினைத்து பயப்படுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் மீனாவின் நடிப்பு அருமையாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா எங்கே தங்குவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.