‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஸ்வர்யா தான் புதிய வில்லியா? உறுதிப்படுத்தும் காட்சிகள்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மீண்டும் மந்தமாக நகர்ந்து வந்து கொண்டிருக்கும் சூழலில், அந்த சீரியலின் புதிய வில்லியாக ஐஸ்வர்யா மாறப்போவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த 2 வாரங்களாக வித்தியாசமான கதைக்களத்துடன் பயணித்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அதிகளவு பார்வையாளர்களை ஈர்த்து இழந்த TRP ரேட்டிங்கை மீண்டுமாக தக்கவைத்துள்ளது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா சம்பந்தப்பட்ட திருமண காட்சிகள் தான் கடைசியாக அதிக பார்வையாளர்கள் கண்டு கழித்த எபிசோடுகளாக இருந்தது. அதை தொடர்ந்து இந்த சீரியலின் கதைக்களத்தில் சில மந்த நிலை காணப்பட்டு வந்தது.
இதை சுதாரித்துக் கொண்ட இயக்குனர், லட்சுமி அம்மா கதாப்பாத்திரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து இறந்து போவதாக ஒரு புதிய ட்விஸ்டை கொண்டுவந்தார். இதனால் எதிர்பார்த்தது போல பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீண்டுமாக உச்ச நிலைக்கு வந்தது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்ற விதத்தில், மூர்த்தி குடும்பத்தினர், கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை ஒதுக்கும்படியாக வெளியான சில காட்சிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
இப்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ திரைக்கதையில் மீண்டுமாக ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது ஐஸ்வர்யா கதாப்பாத்திரம் சற்று வில்லத்தனம் கொண்டதாக மாற்றப்படும் என தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் கோவில் காட்சிகளில் தனத்தை ஐஸ்வர்யா எதிர்த்து பேசியதும், கஸ்தூரியின் சூழ்ச்சியை நம்பி மூர்த்தி வீட்டுக்கு எதிரே குடியேறி அவர்களின் வெறுப்பை சம்பாதிப்பதுமாக அடுத்த கதைக்களம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘சன் டிவி’ சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
இதில் குறிப்பாக கண்ணனுக்கு ஆதரவாக ஐஸ்வர்யா பேசினாலும், அவர் மீது தவறு இருப்பதாக மற்றவர்களின் நினைக்கும்படி சில காட்சிகள் காட்டப்படுகிறது. ஏனென்றால் இந்த சீரியலின் அதிகபட்ச வில்லத்தனமே எதிர்த்து பேசுவது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இனி புது வில்லியாக ஐஸ்வர்யா உருவாகுவாரா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.