இரட்டை குழந்தை பற்றி சௌந்தர்யாவிடம் கேட்கும் பாரதி – கண்ணம்மாவை விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட செல்லும் வெண்பா!
பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்து வர இருக்கும் சம்பவங்கள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
டைவர்ஸ் முடிவு:
இன்று சௌந்தர்யா கண்ணம்மா தனக்கு பிரசவம் பார்த்தது பாரதி தான் என்று சொன்னதை அடுத்து அனைவரும் சந்தோசப்படுகின்றனர். உடனே, கோபமடைந்த பாரதி நான் மாறிட்டேன்னு நெனைச்சு சந்தோச படுறீங்களே, நிச்சயமா நீங்க நினைக்குற மாதிரி நடக்காது, நான் கண்ணம்மாவை மன்னிக்கவே மாட்டேன். அது மட்டுமில்லாமல் கண்ணம்மா வெண்பா தான் டைவர்ஸ் பண்ண சொல்றான்னு சொல்றா, வெண்பா அப்டி பட்டவ இல்ல. இவ்வளவு நடந்தும் நான் ஏன் கண்ணம்மாவை டைவர்ஸ் பண்ணாம இருக்கேன். அடுத்து டைவர்ஸ் தான் என்று சொல்கிறான்.
‘சன் டிவி’ சீரியல் நடிகைகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் அதிர்ச்சி!
சௌந்தர்யாவும், வேணுவும் வீட்டில் ஒண்ணா உக்கார்ந்து பேசும் போது, பாரதியும் கண்ணம்மாவும் ஒன்னு சேர்ந்துடுவாங்க பேசிட்டு இருகாங்க. அப்போ அந்த இடத்துக்கு வந்த பாரதி, கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பொறந்த விஷயம் உங்களுக்கு தெரியாதா என்று அம்மாவிடம் கொஞ்சம் நக்கலாக கேட்கிறார். சௌந்தர்யாவும் தெரியாது என்று சொல்கிறார். அப்புறம் எதுக்கு லட்சுமி அப்புறம் ஹேமாவை ஒண்ணா பழக விடுறீங்க, லட்சுமி என் கூட சேர்க்குறதுக்கு பிளான் பண்றீங்க என்று கேட்டதற்கு வேணு அப்டிலாம் ஓன்னும் இல்லையே என்று சமாளிக்கிறார்.
கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயம் கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், ஆனா சொல்ல மாட்டீங்க என பாரதி கோவப்படுகிறார். ஆனால் சௌந்தர்யா எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொன்னவுடன் நல்லா நாடகம் நடத்துங்க. இதுக்கெல்லாம் சீக்கிரமா ஒரு முடிவு காட்டுறேன் என்று சொல்கிறார். மறுபுறம், கண்ணம்மா வீட்டிற்கு வரும் வெண்பா டைவர்ஸ் பேப்பருடன் வந்து உனக்கு இன்னொரு குழந்தை வேணும்னா இதுல கையெழுத்து போடுன்னு சொல்றா. கண்ணம்மா யோசிக்கும் போது, ரொம்ப யோசிக்காத உன்ன சந்தேகப்பட்டவனை தான பிரிய போறா என்று சொல்கிறாள்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் புதிய ட்விஸ்ட் – இயக்குனரை கலாய்க்கும் ரசிகர்கள்!
இதனால் கண்ணம்மா இதை பற்றி யோசிக்கும் போது அவளின் மனசாட்சி உனக்கு குழந்தை வேணுமா? டைவர்ஸ் வேணுமா என கேட்க, என் குழந்தை தான் முக்கியம் என்கிறாள். அப்ப உன் குழந்தை உனக்கு கிடைச்சிட்டா டைவர்ஸ் வேண்டாம் தானே என்று கேட்பதோடு எபிசோட் முடிகிறது. அடுத்து பாரதியும், கண்ணம்மாவும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று போக போக தான் தெரியவரும்.