கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

0
கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ப்ரோமோ!
கண்ணனுக்கு குழந்தையை காட்ட நினைக்கும் தனம், மறுக்கும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் லேட்டஸ்ட் புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மிகவும் நெகிழ்ச்சியான ப்ரோமோவாக இது இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மிகவும் அழகாக காட்டி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் எப்படி சேரலாம் என்று பல விதங்களில் முயற்சி செய்து வருகின்றனர். இப்படியான நிலையில் தனத்திற்கு பிரசவ வலி எடுக்கின்றது. அப்போது வீட்டினர் யாருமே இல்லாத காரணத்தால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

‘மெட்டி ஒலி’ சீரியல் பிரபல நடிகை மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சின்னத்திரை!!

அங்கு சென்றவுடன் வீட்டினர் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கின்றனர். வீட்டினர் வந்ததும் மிகவும் பதட்டத்துடன் இருக்கும் நிலையில் நர்ஸ் வந்து தனம் மிகவும் நன்றாக இருப்பதாகவும் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் கூறுகிறார். இதனை கேட்டு மொத்த குடும்பமும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். மூர்த்தி தனது குழந்தையை வாங்கி உச்சி முகர்கிறார். பின்னர் அனைவரும் குழந்தையை வாங்கி மிகவும் சந்தோஷத்துடன் கொஞ்சுகின்றனர்.

தற்போது இது தொடர்பான ஒரு ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தனம் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் வந்து குழந்தையை பார்க்கச் சொல்கிறார். ஆனால் வீட்டினர் மறுத்து விடுகின்றனர். கண்ணனும் ஐஸ்வர்யாவும் அமைதியாக தங்களது வீட்டிற்கு சென்று விடுகின்றனர். பின்னர் ஹாஸ்பிடல் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வரும் தனம் குழந்தையை கண்ணனுக்கு எப்படியாவது காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் முல்லையின் சொந்த குரல் – ரசிகர்கள் பாராட்டு மழை!

குழந்தையை மூடி வைத்து இருக்கின்றனர். ஆனால் கண்ணன் பார்க்க வேண்டும் என்பதற்காக தனம் துணியை எடுத்து குழந்தையை காட்டுகிறார். குழந்தையை பார்த்து விட்டு கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா மிகவும் மகிழ்ச்சி அடைகின்றனர். இவ்வாறான மிகவும் நெகிழ்ச்சியான இந்த புரோமோ தற்போது வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!