மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு – ஆண்டிற்கு ரூ.2.11 லட்சம் ஊதிய உயர்வு!
கொரோனா தொற்றுநோய் காரணமாக மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை நிலுவையில் வைத்திருந்தது. தற்போது தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதிய உயர்வு போன்றவற்றை கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலினால் மூன்று தவணைகளாக நிலுவையில் வைத்தது. இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டது. மேலும் அனைவரின் கோரிக்கையின் படி, கடந்த ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மற்றும் DR உயர்வு வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. இதனால் DA 28% ஆக அதிகரிக்கப்பட்டது.
‘மெட்டி ஒலி’ சீரியல் பிரபல நடிகை மரணம் – அதிர்ச்சியில் தமிழ் சின்னத்திரை!!
இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை. இது தொடர்பாக இந்திய ஓய்வூதியர் மன்றம் மத்திய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் நிலுவைத் தொகை மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீபாவளிக்கு முன்னதாக அரசு 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக DA அதிகரித்து வழங்க வாய்ப்புள்ளது. அதவாது கூடுதலாக 3% அதிகரிக்க உள்ளது.
பிக் பாஸ் 5 வீட்டை விட்டு முதலில் வெளியேற இருக்கும் நபர் யார்? ப்ரோமோ வெளியீடு!!
நாட்டில் பணவீக்கத்தின் விளைவைக் குறைப்பதற்காக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தின் ஒரு பகுதிதான் உதவித்தொகை ஆகும். அகவிலைப்படி 31% ஆக அதிகரிக்கப்பட்டால் ரூ.56,900 அடிப்படை ஊதியமாக பெரும் நபர், மாதம் ரூ.17,639 அதிகமாக பெறுவார். இதனால் ஆண்டிற்கு ரூ.2.11 லட்சம் அகவிலைப்படியாக கிடைக்கும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசின் ஊழியர்களுக்கு விரைவில் நிலுவை தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.