‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை விட்டு பிரியும் தனம்? களைகட்டிய வளைகாப்பு நிகழ்ச்சி!
விஜய் டிவியில் தற்போது வளைகாப்பு கொண்டாட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த வளைகாப்பு வைபோகம் ஒளிபரப்பட்டு வருகின்றது. கதாநாயகி தனம் கர்ப்பமாக இருப்பதால், அதனை பெரிய விழா போலவே நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் முதல் சீமந்த வைபோகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அதில் விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
எழிலிடம் வசமாக சிக்கிய கோபி & ராதிகா, பாக்கியாவிற்கு ஸ்கூட்டி சர்பிரைஸ் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இப்படியாக இருக்க, இந்த வாரம் மற்ற சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் மற்ற சீரியல் நடிகைகளான ஜாக்குலின், ரக்ஷிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுகின்றனர். அதே போல் “கலக்கப் போவது யாரு” போட்டியாளர்கள் மற்றும் “சூப்பர் சிங்கர்” போட்டியாளர்கள் இன்னும் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
பின், சீமந்தம் முடிந்ததால், தனத்தினை வீட்டிற்கு அவரது அம்மா அழைக்கிறார். இதனை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் வருத்தம் அடைகின்றனர். கதிர், ஜீவா மற்றும் கண்ணன் கண் கலங்குகின்றனர். மீனா வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்றும் தங்களுடனே இருக்குமாறு கூறி அழுகிறார். இதனால் தனமும் அழுகிறார். அப்போது மூர்த்தி தனத்தை அழைத்து செல்ல வேண்டாம் என்றும், தங்களுடன் அவள் இருக்கட்டும் என்றும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு தனத்தின் அம்மா சரி என்று கூறி விடுகிறார். பல பாசப்போராட்டங்களுடன் ப்ரோமோ முடிவடைகிறது.