எழிலிடம் வசமாக சிக்கிய கோபி & ராதிகா, பாக்கியாவிற்கு ஸ்கூட்டி சர்பிரைஸ் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“பாக்கியலட்சுமி” சீரியல்
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல், “பாக்கியலட்சுமி”. இதில் சாதாரண குடும்ப பெண்மணியாக இருக்கும் பாக்கியா தனது குடும்பம் மற்றும் கணவர் தான் உலகம் என்று வாழ்கிறார். அவருக்குள் இருக்கும் சிறு ஆசைகள், அதனை தடுக்கும் அவரது கணவர், பாக்கியாவை எப்போதும் ஊக்குவிக்கும் அவரது இளைய மகன் என்று இந்த சீரியலில் ஒரு குடும்ப பெண்ணின் வாழ்வினை அழகாக எடுத்து காட்டி வருகின்றனர்.
வனிதா கழுத்தில் தாலி கட்டிய பவர் ஸ்டார் – வைரலாகும் புகைப்படம்!
தற்போது இந்த சீரியலில் பாக்கியா தானாகவே வண்டி ஓட்ட வேண்டும் என்ற உந்துதலோடு, டிரைவிங் கிளாஸ் சேர்ந்து கற்றுக் கொள்கிறார். அவரது கணவரான கோபி அதனை ஊக்குவிக்கவும் செய்கிறார். அதே போல் தனது தோழி ராதிகாவுடன் மிகவும் அன்பாக பழகி வருகிறார். இந்த நிலையில், இன்று ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் கோபி மற்றும் ராதிகா இருவரும் தனியாக ஹோட்டல் செல்கின்றனர். ராதிகா மயூரி குறித்து மிகவும் வருத்தத்துடன் கோபியிடம் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
அவரை கோபியும் சமாதானம் செய்கிறார். இதனை தூரத்தில் இருந்து பார்த்து விடும் எழில் அவரை திட்டுகிறார். எழிலிடம் ராதிகா தனது தோழி என்றும் கோபி கூறுகிறார். ஆனால், எழில் நம்பாமல் சென்று விடுகிறார். இதனால் கோபிக்கு பயம் வந்து விடுகிறது. இதற்கு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று பாக்கியாவிற்கு புது ஸ்கூட்டி வாங்கி கொடுத்து விடுகிறார், அவருக்கு வண்டி ஓட்ட கற்றும் கொடுக்கிறார். கோபி தனது தவறுகளை மறைப்பதற்காக பாக்கியாவிடம் இவ்வாறாக நடந்து கொள்வது போல இந்த ப்ரோமோ முடிவடைகிறது.