ஐஸ்வர்யாவிற்கு போட்டியாக நைட்டி போடும் மீனா – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா நைட்டி போட்டு வர தனம் எதுவும் சொல்லாததால், மீனாவும் நைட்டி போடுகிறார். இதனால் வீட்டில் என்ன நடக்க போகிறது என ஜீவா பதட்டத்துடன் இருக்கிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுப நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தனத்திற்கு குழந்தை பிறந்தது முதல் பெயர் சூட்டும் விழா நடத்தப்பட்டது. அதன் பின் கயல் பாப்பாவிற்கு பிறந்தநாள் விழா வந்தது. கண்ணன் அடிபட்டு இருப்பதால் அவர் மீது இரக்கப்பட்டு தனம் வீட்டிற்கு அழைத்து வந்து விட பிரிந்த குடும்பம் சேர்ந்துள்ளது. சென்ற வாரம் கயல் பாப்பாவிற்கு காது குத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பல குழப்பங்கள் வந்தாலும் குடும்ப ஒற்றுமையை காரணம் காட்டி குடும்பத்தினர் சந்தோஷமாக நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கண்ணன் சரவண விக்ரம் வெளியிட்ட வீடியோ!
ஐஸ்வர்யா புகுந்த வீட்டிற்கு வந்து அங்கே இருப்பவர்கள் மனதில் இடம் பிடிக்க பல முயற்சிகளை செய்து வருகிறார். அனைவருக்கும் சமையல் செய்து அசத்துவதும், காலையில் சீக்கரம் எழுந்து கோலம் போட்டு காபி கொடுப்பது என பல வேலைகளை செய்து வருகிறார். அதனால் வேலை செய்யாமல் இருக்கும் மீனாவை தனம் அடிக்கடி குத்திக்காட்டி பேசுகிறார். இதனால் ஐஸ்வர்யா மீது மீனா கோவமாக இருக்கிறார். இப்படி இருக்க ஐஸ்வர்யா வீட்டில் நைட்டி போட்டு இருக்க யாரும் எதுவும் சொல்லவில்லை.
கணவரின் பெயரை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ‘பிக் பாஸ்’ பிரபலத்தின் மனைவி – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதனால் மீனா ஐஸ்வர்யாவை கண்டிக்க அவர் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார். இதனால் மீனா நானும் நைட்டி போடுவேன் என முடிவு செய்துள்ளார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் அதில் ஜீவா மீனா என்ன செய்ய காத்திருக்கிறார் என பதட்டத்தில் இருக்கிறார். அப்போது மீனா நைட்டி போட்டு கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார். நைட்டி போட்டதும் அழகாக இருப்பதாக அவரே பாராட்டி கொள்கிறார். இதனால் வீட்டில் என்ன பிரச்சனைகள் உருவாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.