‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலை விட்டு பாதியில் விலகும் லட்சுமி அம்மா – வேதனையும், புலம்பலும்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து விட்டு இப்படி பாதிலேயே செல்வது தனக்கு கவலை அளிப்பதாக இருக்கிறது என்று நடிகை ஷீலா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த சீரியலில் தற்போது சோகமான காட்சிகள் மட்டுமே இடம் பெற்று வருகிறது. காரணம், பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் அம்மாவான லட்சுமி அம்மா மறைந்து விடுகிறார். இந்த எதிர்பாராத விஷயத்தை யாராலுமே ஏற்று கொள்ள முடியவில்லை என்று தான் கூற வேண்டும். கூடுதலாக, கடைசி மகனான கண்ணனால் தனது அம்மாவின் முகத்தினை இறுதியில் பார்க்க முடியாமல் போய் விடுகிறது.
அம்மா, அப்பா மீது வழக்கு தொடுத்துள்ள நடிகர் விஜய் – விசாரணை ஒத்திவைப்பு! ரசிகர்கள் ஷாக்!
வேலை விஷயமாக கண்ணன் வெளியூர் சென்று உள்ளதால் அவருக்கு அவரது அம்மா இறப்பு பற்றிய தகவல் தெரியாமல் போகிறது. அதே போல் அவர் தனது போனையும் வைத்து விட்டு சென்று விடுகிறார். அவருக்கு விஷயம் தெரிய வரும் போது அவரது அம்மாவின் உடலை எரித்து விடுகின்றனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த கவலையில் இருந்து வருகின்றனர்.
தெற்கத்தி பொண்ணு டூ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கஸ்தூரி வரை – கம்பம் மீனாவின் குட்டி ஸ்டோரி!
இனி லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடிக்க மாட்டார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ‘கடந்த மூன்று வருடங்களாக இந்த சீரியல் ஆரம்பத்தில் இருந்து நடித்து வருகிறேன். தற்போது பாதியிலேயே விலகுவது வருத்தம் அளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது. நல்ல ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே செல்கிறோம் என்பது மிகவும் கஷ்டத்தை அளிக்கிறது’ என்று கூறி உள்ளார்.