அம்மா, அப்பா மீது வழக்கு தொடுத்துள்ள நடிகர் விஜய் – விசாரணை ஒத்திவைப்பு! ரசிகர்கள் ஷாக்!
தனது பெயரை கட்சியின் பெயரை பயன்படுத்த கூடாது என்று நடிகர் விஜய் தற்போது தனது அம்மா மற்றும் அப்பா உட்பட 11 பேர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் அரசியலில் நுழைந்து வெற்றி கொடி நாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் விஜய் விரைவில் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
உங்களது ரேஷன் கார்டில் ஏதேனும் பிரச்சனையா? மத்திய அரசு வழங்கியிருக்கும் எளிய தீர்வுகள்!
இந்த கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளராக ஷோபா மற்றும் தலைவராக பத்மநாபன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். இதற்கு நடிகர் விஜய் தனது எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார். இது குறித்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்திருந்தார். அதே போல் தனது பெயரை பயன்படுத்தி கட்சி பெயரோ அல்லது கூட்டங்கள் நடத்த கூடாது என்றும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.20 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் விஜய் தரப்பு கலந்து கொள்ளளதாதல் இந்த வழக்கு செப்டம்பர் 27ம் தேதி மறுவிசாரணைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே தந்தை, தாய் உள்பட 11 பேர் மீது தனது பெயரை பயன்படுத்தக்கூடாது என நடிகர் விஜய் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.