தெற்கத்தி பொண்ணு டூ ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கஸ்தூரி வரை – கம்பம் மீனாவின் குட்டி ஸ்டோரி!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் மூலமாக பலர் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை கம்பம் மீனா தனது வாழ்வில் எப்படி முன்னேறி இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கஸ்தூரி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனக்கு என்று தனி கிராமத்து பாஷையின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான், நடிகை கம்பம் மீனா. இவர் முதன் முதலாக பாரதிராஜாவால் தான் தமிழ் திரையுலகில் அறிமுகமானராம். கிராமத்து பாஷை நன்றாக வருவதால் இவருக்கு என்று பல வாய்ப்புகள் அது போலவே அமைத்துள்ளது. அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டதத்தால் தற்போது வரை 75 திரைப்படங்களில் நடித்துள்ளாராம்.
திருமண கோலத்தில் ‘பாரதி கண்ணம்மா’ பரினா கர்ப்பகால போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!
அத்தனை திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் எடுத்து கொடுத்த சீரியல் என்றால் அது, பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இதில் அத்தாச்சி கஸ்தூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கொஞ்சம் அடாவடியாக நடந்து கொண்டாலும் அவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு சொந்த ஊர் கம்பம் தானாம். அதன் காரணமாகவே இவருக்கு கிராமத்து பாஷை நன்றாக வருகிறது. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் செய்து கொண்டாராம். இரு குழந்தைகளை பெற்று எடுத்த இவர் தனது கணவருக்கு உதவியாக எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி புரிந்துள்ளார்.
நாகசைதன்யாவுடன் விவாகரத்து குறித்து கேட்ட நிருபர் – சமந்தா கொடுத்த பதிலடி!
பல இன்னல்களுக்கு மத்தியில் தான் இவர் நடிகையாக முன்னேறி உள்ளார். தொடர்ந்து தங்கை, அக்கா, அண்ணி என்று பல குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானது குறிப்பிடத்தக்கது. இவரது மகனுக்கு தற்போது தான் திருமணமும் செய்து வைத்துள்ளார். கிராமத்தில் இருந்து வந்து ஒரு நடிகையாக இன்று முன்னேறி இருக்கும் கம்பம் மீனா பலருக்கும் ஓர் ரோல் மாடல் தான்.