‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – தாயார் உருக்கம்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் - தாயார் உருக்கம்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் - தாயார் உருக்கம்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சித்ராவின் மரணத்தில் மறைக்கப்பட்ட உண்மைகள் – தாயார் உருக்கம்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா இறந்து தற்போது ஒரு வருடம் கடந்திருக்கும் நிலையில், சித்ராவின் மரணம் குறித்து அவரது தாயார் அளித்துள்ள ரீசன்ட் பேட்டி ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சித்ரா

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தின் உண்மை நிலவரம் என்பது இதுவரை வெளியே வராத ஒரு ரகசியமாக இருந்து வருகிறது. சின்னத்திரை சீரியல்கள் மூலம் மத்தியில் பிரபலமாக இருந்து வந்த விஜே சித்ரா கடந்த வருடம் இம்மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எந்தவொரு மீடியா பின்புலமும் இல்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து வந்த நடிகை சித்ரா ஏகப்பட்ட தோல்விகளை கடந்து தான் இந்த இடத்தை அடைந்தார் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து ஓய்வெடுத்த தனம் சுஜிதா – சொந்த ஊருக்கு பயணம்!

நிஜத்தில் மிகவும் தைரியமான குணம் கொண்ட நடிகை சித்ரா எப்படி தற்கொலை செய்து கொண்டார் என்கிற விஷயம் இன்று வரையும் அவரது ரசிகர்களுக்கு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், சித்ராவின் தாயார் தனது மகளை அவரது காதலர் ஹேமந்த் கொலை செய்ததாக குற்றம் சாட்டி இருக்கிறார். சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘2021ம் ஆண்டு சித்ராவுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டோம்.

ஆனால் ஹேம்நாத் உடனடியாக திருமணம் செய்ய வேண்டும் என சொல்லி கொண்டிருந்தார். சித்ராவை ஹேம்நாத் வீட்டிற்கு அனுப்புவதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும் தங்களது பிள்ளை போல அவரை பார்த்துகொள்வதாக சொன்னதால் தான் அதற்கு சம்மதித்தோம். ஆனால் அவர்கள் ஹோட்டல் ரூமில் தங்கி இருந்த விஷயம் அவர் இறந்ததற்கு பின்பு தான் எங்களுக்கு தெரிய வந்தது. சித்ரா, ஹேம்நாத் இருவரும் சத்தமாக தான் பேசுவார்கள்.

அதனால் ஹோட்டல் ரூமில் அவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டிந்தால் அது கட்டாயமாக எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் CCTV கேமரா கூட இல்லை என்று சொல்கிறார்கள். சித்ரா இறந்து 90 நாட்கள் கழித்து தான் அந்த ரூமை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். அங்கிருந்த பெட்டில் ரத்தக்கறை இருந்தது. அது எப்படி வந்தது. ஆனால் மரணம் தொடர்பான அறிக்கையில், அவள் மூச்சுத்திணறி இறந்ததாக சொல்கிறார்கள்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா விஜே தீபிகா – வைரலாகும் வீடியோ!

இப்போது சித்ரா ஆசையாக வாங்கிய ஆடி காருக்கு EMI கட்ட முடியவில்லை என சொல்லி அதனை தூக்கி சென்றுவிட்டார்கள். அதே போல கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்து அவர் ஆசையாக கட்டிய வீடு எங்கள் கையை விட்டு போகப்போகிறது. எங்களிடம் பணம் இல்லை என்பதால் அவள் சாவுக்கு இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அவரது ரசிகர்கள் தான் எங்களை பார்க்கும் போது உதவி செய்கிறார்கள்’ என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!