“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சித்ராவின் இறப்பில் இருக்கும் சந்தேகங்கள் – மனம் திறந்த ஹேம்நாத் நண்பர்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முல்லையாக மறைந்த பின் கூட வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை விஜே சித்ரா. அவர் இறந்து தற்போது ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் அவருடைய இறப்பு குறித்த மர்மத்தை அவரது கணவரின் 8 வருட நண்பர் ஒருவர் மனம் திறந்து சொல்லி இருக்கிறார்.
நடிகை விஜே சித்ரா:
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் தொடங்கப்பட்ட புதிதில் கதிர் முல்லை ஜோடிக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. அவர்களின் கெமிஸ்ட்ரி ஒரு கட்டத்தில் சீரியலின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்தது. ஆனால் அனைவரும் எதிர்பாராத விதமாக முல்லையாக நடித்த விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலை இன்னும் மர்மமாகவே உள்ள நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அவருடைய கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் இருந்த நிலையில் அவர் தற்போது பெயிலில் வெளியே வந்திருக்கிறார்.
இந்நிலையில் மே 2 ஆம் தேதி சித்துவிற்கு பிறந்தநாள் என்பதால் அவரை நினைவு கூர்ந்து ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து அடுத்த நாளே சித்ராவின் கணவர் ஹேமந்த் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுருந்தார். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தான் உயிரோடு இருப்பதாக சொன்ன அவர் சித்ராவின் இறப்புக்கு யார் காரணம் என எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார். அது குறித்த பேட்டி ஒன்றை தனியார் யூடுப் சேனலில் கொடுத்திருந்தார்.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து ஹேமந்த்தின் 8 வருட நண்பர் ஒருவர் சித்ராவின் சாவிற்கு ஹேமந்த் தான் காரணம் எனவும் அந்த ஹோட்டல் அறையை நான் தான் கடைசியாக பார்த்தேன் எனவும் அதில் பல போதை பொருள்கள் இருந்ததாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். மேலும் ஹேமந்த் சரி இல்லாதவர் எனவும் அவரால் தான் சித்ராவிற்கு இந்த நிலைமை வந்துள்ளதாக நெருங்கிய நண்பரே சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சித்ரா உயிரோடு இல்லை என்பதால் இப்படி ஆளுக்கு ஒரு கதை சொல்வதாக ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து இருக்கின்றனர்.