மீண்டும் இரவு வெளியே சென்ற கண்ணன், போலீசில் சிக்காமல் தப்பி ஓட்டம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” நாளை எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கர்ப்பமாக இருக்க வேண்டும் என குடும்பத்தில் அனைவரும் ஆசைப்பட, அதை பற்றி நினைத்து கதிர் வருத்தப்படுகிறார். இந்நிலையில் நாளைய எபிசோடில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மீண்டும் இரவு வெளியே சென்று போலீசில் மாட்டிக் கொள்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதைக்களம் முழுவதும் முல்லையை மட்டுமே சுற்றி இருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்பது பெரிய திருப்பமாக இருக்க போகிறது. டிரீட்மென்ட் முடிந்து முல்லைக்கு நல்லவிதமாக இருப்பதாக டாக்டர் சொல்கிறார். அதை நினைத்து அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். முல்லை இப்பவே கர்ப்பமாக இருப்பதாக நினைக்கிறார். முல்லையின் அம்மா குழந்தைக்கு பெயர் வைப்பது வரை பேசி விடுகின்றனர். அதனால் கதிர் அதை நினைத்து வருத்தப்படுகிறார்.
Exams Daily Mobile App Download
தனம் ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்க அதற்கு கதிர் முல்லையின் பிடிவாத குணத்தை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது. அவளுக்கு ஒன்று வேண்டும் என நினைத்தால் அதை கண்டிப்பாக அடைவாள் என சொல்கிறார். தனம் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என ஆறுதல் சொல்கிறார். மறுபக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதலில் மூழ்கி கிடக்கின்றனர். ஏற்கனவே ஒரு முறை இரவு வெளியே சென்று பணம் இல்லாமல் சாப்பிட்டு மாட்டிக் கொண்டார்கள்.
பத்ரிநாத் & கேதார்நாத் செல்ல விரும்புபவர்கள் கவனத்திற்கு – டூர் பேக்கேஜ் அறிமுகம்! முழு விவரம் இதோ!
அப்போது ஜீவா தான் முல்லைக்கு உதவி செய்தார். அந்த வகையில் நாளைய எபிசோடில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மீண்டும் வெளியே செல்கின்றனர். அப்போது இரவு போலீசார் நிற்பதை பார்த்து கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஓடுகின்றனர். அப்போது போலீஸ் அவர்களை துரத்தி சென்று பிடிக்க இந்த நேரத்தில் எதற்கு வந்தீங்க என கேட்கிறார். அப்போது டீ குடிக்க வந்தோம் என சொல்ல போலீசார் அவர்களை இழுத்துக் கொண்டு வர சொல்கின்றனர். அதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வர இருக்கிறது.