விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா ஹேமா யார் தெரியுமா? சீரியலில் சாதித்த கதை! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவின் சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை ஹேமா:
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. குறிப்பாக பல குடும்ப ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்கள் இருக்கின்றனர். மூர்த்தி கதாபாத்திரத்தில் ஸ்டாலின், ஜீவா கதாபாத்திரத்தில் வெங்கட், கதிர் கதாபாத்திரத்தில் குமரன் நடிக்கிறார்கள். ஜீவாவின் மனைவியாக மீனா கதாபாத்திரத்தில் ஹேமா நடித்து வருகிறார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப், இமான் அண்ணாச்சி – டபுள் எலிமினேஷன்! ரசிகர்கள் ஷாக்!
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹேமா சினிமாவில் எவ்வாறு பிரபலமானார் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை ஆகும். இவரது பள்ளி படிப்பை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அதன் பின் ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார். நடிப்பில் ஆர்வம் உள்ள அவர் உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் மூலம் தான் அவரது சினிமா வாழ்க்கை தொடங்கியது. அதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு சென்ற அவர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பின் சில தொலைக்காட்சிகளிலும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி உள்ளார்.
அதன் பின் சீரியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முதன்முதலில் விஜய் டிவி ஆபிஸ் சீரியல் மூலம் இவர் நடிக்க தொடங்கி பொன்னூஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும் வெள்ளித்திரையில் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவருக்கு விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரம் தான் நல்ல புகழை கொடுத்தது. முதலில் குடும்பத்திற்கு எதிராக அவரது கதாபாத்திரம் கொண்டு சொல்லப்பட்டாலும் தற்போது தற்போது பாசிட்டிவாக கதைக்களம் அமைந்துள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூன்று வருட கதை – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் குஷி!
கணவரிடம் சண்டை போடுவதும், கண்ணனை கலாய்ப்பதும், தேவைப்படும் போது ஆதரவாக இருப்பதும் என அவர் இருக்க தனது அம்மா அப்பாவிடம் அவர் ஒருநாளும் புகுந்த வீட்டை விட்டு கொடுக்காமல் இருக்கிறார். மேலும் பணக்கார பெண்ணாக வளர்ந்து கணவனுக்காக பல விஷயங்களை பொறுத்து போவது மனதில் பட்டத்தை பேசுவது என அவரது கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது. சாதாரண குடும்பத்தில் இருந்து சீரியலில் நல்ல பிரபலமாக இருக்கும் அவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்த நிலையில் சீரியலிலும் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட்டு குழந்தை பிறப்பு வரை அவர் சீரியலில் நடித்தது எல்லாம் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.