“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூன்று வருட கதை – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் குஷி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவண விக்ரம் தனது அம்மா, தங்கை உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூன்று வருட கதை பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தில் உள்ள பாசத்தை மையமாக கொண்ட கதை உடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பி என 4 பேரும் ஒற்றுமையாக இருக்க அவர்களது மனைவிகளும் குடும்பத்தின் ஒற்றுமைக்காக போராடுவதே கதையின் மையக்கருத்து. மேலும் கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் தம்பிகளுக்கு இடையே விரிசல் ஏற்படுகிறது. அதனால் மூத்த அண்ணன் அவனை ஒதுக்க, அம்மா இறந்தது கூட தெரியாமல் இருக்கிறார்.
கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்கிறார். அம்மா இறந்ததை அடுத்து மொட்டை போட்டு தன்னுடைய நடிப்பு திறமையால் பலரது பாராட்டுகளை சரவண விக்ரம் பெற்றார். இந்நிலையில் அவர் தனியாக யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அவரது அம்மா தங்கை உடன் பல வீடியோக்களை அவர் பதிவிடுவார்.
அடுத்த 2 நாட்களுக்கு புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள், 144 தடை அமல் – வழிகாட்டுதல்கள் வெளியீடு!
அந்த வகையில் தற்போது தனது தங்கை அம்மாவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கார். அதில் அவர் வண்டியில் செல்ல, ஓட்டுநர் எதை பார்த்தாலும் இப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் தான் வருகிறது. முதலில் இரண்டாவது அண்ணிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு குழந்தை பிறந்தது, பின் மூத்த அண்ணிக்கு அதே போல நடந்திருக்கு அப்பறம் என்ன மூன்றாவது அண்ணிக்கு ஆகும். ஏற்கனவே இரண்டாவது குழந்தை வந்ததில் இருந்து இரண்டாவது அண்ணி வருத்தமாக இருக்கிறார். இப்படியே தான் கதை போகும் என மூன்று வருட கதையை அவர் சொல்ல ஆச்சர்யப்பட்ட கண்ணன் கதை எழுதுபவரை விட அதிகம் யோசித்து இருக்கீங்க என நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்.