‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறும் நிரூப், இமான் அண்ணாச்சி – டபுள் எலிமினேஷன்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ சீசன் 5க்கான இந்த வார எலிமினேஷனில் 2 போட்டியாளர்கள் இடம்பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த போட்டியாளர்கள் யார் என்கிற விவரம் தற்போது பெறப்பட்டுள்ளது.
பிக்பாஸ் எலிமினேஷன்
வழக்கம் போல இந்த முறையும் மிகவும் பிரமாண்டமாக துவங்கப்பட்ட ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 68 நாட்களை கடந்துள்ளது. இந்த சீஸனின் துவக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் திருநங்கை போட்டியாளர் நமீதா மாரிமுத்து மட்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தானாகவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து ஒவ்வொரு வார எபிசோடிலும் இதுவரை 7 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் மூன்று வருட கதை – கண்ணன் வெளியிட்ட வீடியோ! ரசிகர்கள் குஷி!
இதில் முதல் மாதத்தில் வெளியான போட்டியாளர் அபிஷேக் மட்டும் வைல்ட் கார்டு மூலம் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ரீஎன்ட்ரி கொடுத்து, கடந்த வார எலிமினேஷனில் அவரும் வெளியேற்றப்பட்டார். மேலும் வைல்ட் கார்டு மூலம் அமீர், சஞ்சீவ் ஆகியோர் இந்த சீசனில் கலந்து கொண்டு வருகின்றனர். இதையடுத்து ‘பிக்பாஸ்’ வீட்டின் இந்த வார நாமினேஷலில், அபிநய், நிரூப், இமான், சிபி, அக்ஷரா, அமீர் என 6 பேர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்கான வோட்டிங் ப்ராசஸ் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் இந்த வாரம் 2 பேர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த வார வோட்டிங்கில் மிகவும் குறைந்த வாக்குகளை பெற்றிருக்கும் நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவர் தான் ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. மறுபக்கத்தில் இமான் அண்ணாச்சிக்கு பதிலாக போட்டியாளர் சிபியும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என தெரிகிறது. இந்த தகவல்கள் ‘பிக்பாஸ்’ ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்திருக்கும் நிலையில், எலிமினேஷனில் என்ன நடக்க போகிறது என்பதை காண நாளை வரை காத்திருக்க வேண்டும்.