முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்? ஒன்றாக இணையும் அண்ணன், தம்பிகள்!
விஜய் டிவியில் டாப் 5 சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், லட்சுமி அம்மாவின் ஆசைக்கு இணங்க குலதெய்வம் கோவிலுக்கு செல்ல வேண்டும் என குடும்பத்தினர் திட்டமிடுகின்றனர். அப்போது தனம் கண்ணனை கூப்பிடுவோம் என சொல்ல மூர்த்தி சரி என சொல்கிறார். இதனால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் விஜய் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்ப்பு உண்டு. கூட்டு குடும்பம், குடும்ப ஒற்றுமை, அண்ணன் – தம்பி பாசம் என சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், கடந்த இரண்டு வாரங்களாக சென்டிமென்ட், அழுகை என சோகமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் லட்சுமி அம்மா இறப்பு தான், அதன் பின் அவரது இறுதி சடங்கு காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளன.
மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!
அதனால் கடந்த வார TRPயில் இந்த சீரியல் மற்ற சீரியல்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ப்ரோமோவின் படி, தனத்தின் கனவில் வரும் லட்சுமி அம்மா நான் எங்கும் செல்லவில்லை. இங்கு தான் இருக்கிறேன். யாரையும் அழுக விடாமல் பார்த்துக் கொள் என ஆறுதல் கூறுகிறார். இதை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி, அனைவரையும் தேற்றுகிறார் தனம். இதற்கிடையில் கண்ணனுக்கும் சாப்பாடு கொடுத்து விடுகிறார். இதை கவனித்து கேட்கும் மூர்த்தியிடம், கண்ணன் என்னுடைய மகன். அவன் சாப்பிடாமல் இருப்பதை என்னால் தாங்க முடியாது என்கிறார். அதை ஏற்றுக் கொள்கிறார் மூர்த்தி. மேலும் தனது தம்பிகளிடம் கண்ணனிடம் இப்படி நடந்து கொண்டது தவறு தான். ஆனால் என்னால் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள முடியவில்லை என அழுது புலம்புகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் – மீனா காட்டம்!
இந்நிலையில் அடுத்து நடைபெறும் எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அம்மா இறந்ததை அடுத்து குலதெய்வம் கோவிலுக்கு சென்று படையல் வைக்க வேண்டும் என முல்லையின் அப்பா சொல்கிறார். உடனே தனம் கண்ணனை அழைப்போமா என கேட்கிறார். மூர்த்தியும் அதற்கு சரி என சொல்லி தலையாடுகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் ஒன்று சேர போகிற இந்த ப்ரோமோ, ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சீரியல் முடிய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.