மல்லிகாவால் தனத்திற்கு வரப்போகும் ஆபத்து – பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், குடும்பத்தில் நடக்கும் இத்தனை பிரச்சனைக்கும் கண்ணன் தான் காரணம் என நினைத்துக் கொண்டிருக்க முக்கிய காரணமாக இருப்பது பிரசாந்த் தான். ஆனால் இன்றைய எபிசோடில் தனத்தை பழி வாங்குவது போல மல்லி பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், தனத்தின் அம்மா வீட்டிற்கு வர அங்கே கஸ்தூரியும் மல்லியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். பிரசாந்த் அத்தை இறந்ததை நினைத்து மிகவும் கவலைப்பட்டான் என சொல்ல என்ன செய்ய இருவருக்கும் திருமணம் செய்து வைத்து நான்றாக வாழ வைக்கலாம் என நினைத்தோம் என சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து தனத்தின் அம்மா வர என்னாச்சு என கஸ்தூரி கேட்கிறார். துணி எடுக்க வந்ததாக அவர் சொல்ல, அங்கே எல்லாரும் சரியாகிவிட்டார்களா என கஸ்தூரி கேட்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ லட்சுமி அம்மா இறப்பு, உழைப்பை கொச்சைப்படுத்தாதீர்கள் – மீனா காட்டம்!
எல்லாம் இருக்காங்க தனம் தான் அவங்களை எல்லாம் பார்த்துக் கொள்கிறாள். வீட்டிற்கு வந்த அனைவரும் தனத்தை அவ்வளவு பெருமையாக பேசினார்கள். என் மகள் என்பதற்காக சொல்லவில்லை எல்லாம் பார்த்து பார்த்து அவளும் செய்தால் என சொல்கிறார். உடனே மல்லிக்கு கோவம் வர, அவர் உள்ளே சென்றதும் கஸ்தூரியிடம், தனம் தான் கோவிலில் என்னை பார்த்து வீட்டிற்கு அழைத்து சென்றால் இல்லையென்றால் இது எல்லாமே நடந்திருக்காது என சொல்கிறார்.
சமையல் ஆர்டரை சிறப்பாக முடித்து கொடுத்த பாக்கியா & கோ, ரசிகர்கள் கொண்டாட்டம் – ப்ரோமோ!
ஆமாம் இதற்கு முன்னால் அந்த அம்மா முடிவு எடுத்தது இனி எல்லாம் தனம் ராஜ்ஜியம் தான், தனத்திற்கு குழந்தை வேற பிறந்தால் கையில் பிடிக்க முடியாது என கஸ்தூரி சொல்கிறார். நான் வாழ வேண்டிய வாழ்க்கையை அவள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். நான் தான் இப்படி இருக்கேன் என தனத்தின் மீது கோபத்துடன் இருக்கிறார். இவ்வரை இப்படியே காட்ட தனத்திற்கு எதிரியாக இவர் தான் வருவார் போல தெரிகிறது. கதையில் மல்லி கதாபாத்திரம் முக்கியமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.