வைஷாலியுடன் காதல், தீபிகாவுடன் கல்யாணம், காயத்ரியுடன் வாழ்க்கை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணனை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், ஐஸ்வர்யா கதாபாத்திரம் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் நிலையில், கண்ணன் கதாபாத்திரம் லவ் பண்ணது ஒரு பெண்ணை, கல்யாணம் பண்ணது ஒரு பெண்ணை, வாழ்க்கை நடத்துறது வேற ஒரு பெண்ணுடன் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக கூட்டு குடும்பத்தின் நன்மை, அண்ணன் & தம்பி பாசம், அண்ணிகளின் கடமை ஆகியவற்றை உணர்த்தும் வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பி என 4 பேர் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த பாசத்துடன் இருக்கின்றனர். ஆனால் கடைசி தம்பி கண்ணன் தனது காதலுக்காக அண்ணன்களை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்.
அதனால் கோவப்பட்ட மூத்த அண்ணன் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். ஆனாலும் ஒவ்வொரு அண்ணனும், அண்ணியும் கண்ணனுக்கு மறைமுகமாக உதவி செய்கின்றனர். இரண்டாவது அண்ணியின் அப்பா மூலமாக கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு தங்க இடம் மற்றும் வேலை கிடைக்கிறது. அதை வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் முதலில் கண்ணனிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை வைஷாலி நடித்தார். அவரை தான் கண்ணன் காதலிப்பதாக காட்டப்பட்டது. அதன் பின்னர் அந்த கதாபாத்திரம் மாற்றப்பட்டு விஜே தீபிகா நடித்தார். அவரை தான் திருமணம் செய்து கொள்வது போல காட்டப்பட்டது.
ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
இந்நிலையில் மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நடிக்கிறார். இதனால் நெட்டிசன்கள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகையை மாற்றுவது குறித்து குறிப்பிடுகையில், லவ் பண்ணது வைஷாலிய, கல்யாணம் பண்ணது விஜே தீபிகாவை, வாழ்க்கை நடத்துறது சாய் காயத்ரியோட, இது என்ன நியாயம் கண்ணன் சார் என்று நெட்டிசன்கள் ஜாலியாக கேட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த கதாபாத்திரத்தில் சாய் காயத்ரி நிச்சயம் செட் ஆக மாட்டார். கண்ணனுக்கு அவர் அக்கா போல இருக்கிறார் என சிலர் கமெண்ட் செய்து வருகிறார்.