சரவணன் வீட்டிற்கு வரும் சந்தியாவின் தோழி அனிதா, பிரிய மனமில்லாமல் இருக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்ப சிவகாமி தான் காரணம் என சரவணனின் அப்பா சொல்கிறார். அப்போது சந்தியாவின் தோழி அனிதா அங்கே வந்து நடந்ததை சொல்லி தெளிவுபடுத்துகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பியதற்கு சிவகாமி தான் காரணம் என சொல்கிறார். நான் என்ன செய்தேன் என அவர் கேட்க இந்த வீட்டில் சந்தியா ஒரு நாள் கூட சந்தோஷமாகவே இல்லை என சொல்கிறார். நான் சந்தியாவை எதுவும் செய்யவில்லை. அவங்க இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை அதற்கு என் மேலே பழி போடுவது சரி இல்லை என சொல்கிறார். நீ தான் புருஷன் பேச்சை கேட்டு இருக்கனும் என சொல்லுவ, ஆனால் நீ என் பேச்சை ஒரு நாள் கூட கேட்க மாட்ட என சொல்கிறார்.
இருவரும் வாக்குவாதம் செய்ய அங்கே சந்தியாவின் தோழி அனிதா வருகிறார். நீ எதற்கு இங்கே வந்த என கேட்க சரவணன் தான் வர சொன்னார் என சொல்கிறார். சந்தியா எங்கே என கேட்க அவளை வீட்டை விட்டு சரவணன் அனுப்பி விட்டான் என சொல்கிறார். சந்தியாவிற்கு ஒவ்வொரு தடவையும் பிரச்சனை வந்த போதும், அவளை வீட்டை விட்டு வந்துவிடு என சொல்லிருக்கேன், ஆனால் அவள் இது தான் என்னுடைய குடும்பம் ஒரு நாள் என்னை இவர்கள் புரிந்து கொள்வார்கள் என சொல்வாள் என சொல்கிறார்.
ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறிந்து சந்தோசப்படும் குடும்பத்தினர் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
அதன் பின்னர் சிவகாமியிடம், உங்களுக்கு ஏன் சந்தியாவை பிடிக்கவே இல்லை என கேட்க, நான் எப்போ சொன்னேன் பிடிக்காது என, எனக்கு அவளை மிகவும் பிடிக்கும் எல்லாரும் என்னை ஏன் காரணம் சொல்றீங்க என சொல்கிறார். என்னை தேடி தான போயிருக்காங்க நான் அவங்களுக்கு முன்னதாக அங்கே சென்றுவிடுகிறேன் என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். சரவணன் சந்தியாவை பிரிய மனமில்லாமல் பஸ்ஸில் சந்தியாவை பார்த்துக் கொண்டு வருகிறார்.
இரட்டை குழந்தைகள் பற்றி அகிலிடம் கேட்கும் கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
அப்போது சிவகாமி சரவணன் சந்தியாவிற்கு போன் செய்து பாருங்கள் என சொல்ல இருவரும் போன் செய்கிறார்கள்.பேருந்து ஒரு இடத்தில் பழுதாகி நிற்க அனைவரும் இறங்குகின்றனர். சரவணன் சந்தியா பார்க்காமல் மறைந்து நின்று கடைக்கு செல்கிறார். பின்னர் சிவகாமி வீட்டில் மாப்பிளை மற்றும் அம்மா வருகின்றனர். இவர்கள் எதற்கு இங்கே வருகிறார்கள் என தெரியாமல் சிவகாமி குழப்பத்தில் இருக்கிறார். பார்வதியிடம் சந்தியாவை வெளியே அனுப்பியது பற்றி எதுவும் சொல்லாதே என சிவகாமி சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.