ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்ட கண்ணன் – பாண்டியன் ஸ்டோர்ஸில் வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்த கட்டமாக கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரது திருமணம் நடக்க இருப்பதாக புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் டீவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும், மக்கள் பலரும் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது, “பாண்டியன் ஸ்டோர்ஸ்” தான். இதில் கூட்டு குடும்பத்தின் யதார்த்தம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த சீரியலின் முக்கிய கட்டமான தனத்தின் வளைகாப்பு விழா தற்போது வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை அடுத்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவின் காதல் ஒரு புறம் சென்று கொண்டு இருந்தது.
மாயனுக்கு தெரியாமல் முத்துராசை சந்திக்க சென்றுள்ள மஹா – இன்றைய எபிசோட்!!
இருவரது காதலை பற்றி ஐஸ்வர்யா அவருக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையான பிரசாந்திடம் கூறுகிறார். இதனை அறியும் பிரசாந்த், திருமணத்தை நிறுத்தாமல் தனக்கு ஐஸ்வர்யா தான் மனைவியாக வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக தனது குடும்பத்தினரிடம் கூறி, விரைவாக திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார். இதனை அறிந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நொந்து போய் விடுகின்றனர். இருவரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கஸ்தூரி ஒரு புறம், கண்ணன் மீண்டும் மீண்டும் ஐஸ்வர்யாவை தொந்தரவு செய்வதாக தனம் மற்றும் முல்லையிடம் புகார் செய்கிறார். இதனால் கோபம் அடையும் முல்லை அவர் ஏற்கனவே பணத்தினை திருடி, ஐஸ்வர்யாவிற்கு பீஸ் கட்டிய விவகாரத்தை கூறி விடுகிறார். இதனால் கோபம் அடையும் மூர்த்தி, அவரை அடித்து விட்டு, இனி தன்னிடம் பேச வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டை விட்டு ஓடி போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்து விடுகின்றனர். அடுத்த கட்டமாக, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரது திருமணம் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் திருமண உடையில் கோவிலில் இருப்பது போல உள்ளது.