மாயனுக்கு தெரியாமல் முத்துராசை சந்திக்க சென்றுள்ள மஹா – இன்றைய எபிசோட்!!

0
மாயனுக்கு தெரியாமல் முத்துராசை சந்திக்க சென்றுள்ள மஹா - இன்றைய எபிசோட்!!
மாயனுக்கு தெரியாமல் முத்துராசை சந்திக்க சென்றுள்ள மஹா - இன்றைய எபிசோட்!!
மாயனுக்கு தெரியாமல் முத்துராசை சந்திக்க சென்றுள்ள மஹா – இன்றைய எபிசோட்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று மஹா மற்றும் கத்தி இருவரும் ஒன்றாக பேசியதை பார்த்து விடும் மாயன் என்னவென்று விசாரிக்கிறார். மஹா, முத்துராசு கொலை செய்யப்படுவதற்கு முன்பாக தான் சென்று பார்த்த விவரத்தை கூறுகிறார்.

“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான், “நாம் இருவர், நமக்கு இருவர்” இந்த சீரியலில் இன்று மஹா மற்றும் கத்தி இருவரும் முத்துராசு மரணம் அடைந்ததற்கு முன்பு நடந்த விஷயங்களை பற்றி பேசுகின்றனர். அப்போது இதனை தூரத்தில் இருந்து மாயன் கேட்டு விடுகிறார். பின், மஹாவிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார். மஹா தான் ஐஸ்வர்யாவின் வீடீயோக்களை அழித்து விடுமாறு முத்துராசுவிடம் பேச வேண்டும் என்று தனியாக கெஸ்ட் ஹவுஸ் செல்கிறார்.

ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுத்த நடிகை குஷ்பு – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அங்கு அதிகப்படியாக மது அருந்தி விட்டு முத்துராசு இருக்கிறார். இதனால் பயந்து விடும் மஹா, தன்னை சமன் செய்து கொண்டு அவரிடம் பேசுகிறார். ஐஸ்வர்யா முத்துராசுவின் மனைவி தான் என்றும், அதனால் வீடீயோக்களை அழித்து விடுமாறு கூறுகிறார். இதனை கேட்கும் முத்துராசு தான் அந்த வீடீயோக்களை அழித்து விடுகிறேன் என்று கூறி விட்டு மஹாவிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இதனால் கோபம் அடையும் மஹா, இது போல நடந்து கொள்ள வெட்கப்பட வேண்டும் என்றும், மேலும் இது போல நடந்து கொண்டால் மாயனிடம் சென்று சொல்லப்போவதாகவும் மிரட்டுகிறார்.

TN Job “FB  Group” Join Now

இதனை கேட்டு சிரிக்கும் முத்துராசு, மஹாவிடம் மீண்டும் நெருங்கி வருகிறார். இதனால் கோபம் அடையும் மஹா அவரை நன்றாக திட்டி விடுகிறார். பின், அவர் அசந்த நேரம் ஐஸ்வர்யாவின் வீடீயோக்கள் இருக்கும் போனை எடுத்து விடுகிறார். பின், அத்துடன் ஒரு லெட்டரை எழுதி விட்டு, அதனை வீட்டின் முன்பு போட்டு விடும்படி கத்தியிடம் கூறி விட்டு மஹா வீட்டிற்கு சென்று விடுகிறார். கத்தி மீண்டும் முத்துராசு இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் செல்கிறார். இதனை கேட்கும் மாயன் இவ்வளவு நடந்து இருக்கின்றது, அதனை ஏன் தன்னிடம் கூறவில்லை என்றும் மஹாவிடம் கேட்கிறார். முத்துராசு மரணம் அடைந்ததும் தான் பயந்து விட்டதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!