பியூட்டி பார்லர் வைப்பதில் சண்டை போடும் மருமகள்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வருபவை!

0
பியூட்டி பார்லர் வைப்பதில் சண்டை போடும் மருமகள்கள் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வருபவை!
பியூட்டி பார்லர் வைப்பதில் சண்டை போடும் மருமகள்கள் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் அடுத்து வருபவை!
பியூட்டி பார்லர் வைப்பதில் சண்டை போடும் மருமகள்கள் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய திருப்பம் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில எபிசோடுகளில் விறுவிறுப்பு குறைந்து உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது வர இருக்கும் புதிய கதை களத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடம் பிடித்து வருகிறது. கடந்த சில எபிசோடுகளில் கதிர் வீட்டை விட்டு வெளியேறி புதிய ஹோட்டல் தொடங்குவது குறித்த காட்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து ஹோட்டல் தொடங்கிய முதல் நாளில் நஷ்டம் ஏற்படுகிறது. இதையடுத்து ஹோட்டலை எப்படி லாபத்துடன் நடத்துவது என முல்லையும்,கதிரும் புலம்புகின்றனர். இந்த நிலையில் முல்லையின் அக்கா மல்லி கதிரிடம் வியாபாரத்தில் நல்ல நிலைக்கு வருமாறு சவால் விடுகிறார். மேலும் பதிலுக்கு கதிரும் சவால் விடுகிறார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா புதிதாக பியூட்டி பார்லர் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இன்னொருபுறம் கண்ணாவின் வேலைக்கு பணம் கட்டப்பட்டு வேலைக்கு செல்ல இருக்கிறார். ஒரு வழியாக ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்த மூர்த்தி ஓகே சொன்னதை அடுத்து வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மூர்த்தி வெளியில் சென்று வேலை பார்க்க கூடாது என்று ஐஸ்வர்யாவிடம் கூறுவது, அடுத்து ஐஸ்வர்யாவும், கண்ணாவும் வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோபி குடும்பத்தை பற்றி கேவலமாக பேசும் ராதிகா, கொந்தளித்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் கண்ணா பேங்க் வேலையில் சேருவதற்காக கிளம்புகிறார். அப்போது ஜீவா அங்கு வந்து நீ என்னோட வண்டிய எடுத்துட்டு போ, நான் ஷேர் ஆட்டோவில் போயிக்கிறேன் னு சொல்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. மற்றொரு பக்கம் முல்லை ஹோட்டலில் புதிதாக என்ன செய்தால் வியாபாரம் நன்றாக ஓடும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா பியூட்டி பார்லர் வீட்டிலேயே தொடங்கி இருப்பதை தொடர்ந்து, மீனா கண்டிப்பாக நானும் ஏதாவது தொழில் பண்ணுவேன்னு சண்டை போடுவார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைகளம் அடுத்தடுத்து விறுவிறுப்பாக போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!