கோபி குடும்பத்தை பற்றி கேவலமாக பேசும் ராதிகா, கொந்தளித்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

0
கோபி குடும்பத்தை பற்றி கேவலமாக பேசும் ராதிகா, கொந்தளித்த கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
கோபி குடும்பத்தை பற்றி கேவலமாக பேசும் ராதிகா, கொந்தளித்த கோபி - 'பாக்கியலட்சுமி' சீரியல் ட்விஸ்ட்!
கோபி குடும்பத்தை பற்றி கேவலமாக பேசும் ராதிகா, கொந்தளித்த கோபி – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ட்விஸ்ட்!

தமிழ் சீரியல்களை பொறுத்த வரை தற்போது பல வித ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருவது, பாக்கியலட்சுமி சீரியல். தற்போது யாருமே எதிர்பாராத விதமாக ராதிகா மற்றும் கோபி இருவருக்குள்ளும் சண்டை ஏற்படும் படியான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் தற்போது மக்கள் மனதில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் சீரியல் என்றால் அது, பாக்கியலட்சுமி சீரியல் தான். தனது ஆருயிர் தோழியான ராதிகாவை காதலிக்கும் கோபி தனது குடும்பத்தினரையும் எதிர்த்து அவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். இதனை அறிந்து கொள்ளும் பாக்கியா அனைவரும் எதிர்பார்த்த படி காளி அவதாரம் எடுத்து கோபியை நன்றாக திட்டி விடுகிறார். பாக்கியாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர்ப்பினை எதிர்பார்க்காத கோபி வேறு வழியில்லாமல் ராதிகாவிடம் சென்று தனது நிலையினை எடுத்து கூறுகிறார்.

முதலில், பாக்கியா தான் கோபியின் மனைவி என்று தெரிந்து வருத்தப்படும் ராதிகா, பின்னர் தனது தோழருக்காக மனம் மாறி கோபியை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளப் போகிறார். ஆனால், அதற்கு இடையூறாக ராதிகாவின் அம்மா கோபியை நன்றாக திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். இதனை எல்லாம் பார்க்கும் ராதிகாவால் எதுவுமே செய்ய இயலவில்லை. தனது அம்மாவிடம் கோபப்படும் போது அவர் ராதிகாவை பாரபட்சம் இல்லாமல் திட்டியும் விடுகிறார். இப்படி பல களேபரங்கள் நடந்து கொண்டு இருக்கும் போது, கோபியின் அம்மா ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கே சென்று அவரை கேவலமாக பேசி விடுகிறார்.

கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர சம்மதிக்கும் பாக்கியா – புதிய அதிரடி திருப்பங்கள்!

Exams Daily Mobile App Download

இதனை கேட்டு விட்டு பொறுக்க முடியாத ராதிகா கோபியிடம் சொல்லி அழுகிறார். எப்போதுமே ராதிகாவிற்கு ஆதரவாக பேசும் கோபி தனது குடும்பத்தினர் பற்றி ராதிகா கூறியதைக் கேட்டதும் கொந்தளித்து விடுகிறார். கோபியிடம் இருந்து இது போன்ற எதிர்ப்பினை ராதிகா கண்டதும் அவருக்கும் கோபம் வந்து, இருவரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். இது வரை ஒன்றாக இருந்து வந்த ராதிகா மற்றும் கோபி இருவரும் சண்டை போட்டு கொள்வதால் இருவருக்கும் திருமணம் நடைபெறுமா? அல்லது அனைவரது விருப்பம் போலவே பிரிந்து விடுவார்களா? என்பதை இனி வரும் எபிசோட் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!