கோபியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர சம்மதிக்கும் பாக்கியா – புதிய அதிரடி திருப்பங்கள்!
விவாகரத்து பெற்ற கையோடு பாக்கியா கோபியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார். இந்நிலையில், கோபியை அனுப்பியதை வைத்து குடும்பத்தினர்கள் பாக்கியாவை திட்டியதால், மீண்டும் கோபி வீட்டிற்கு வர பாக்கியா சம்மதிக்குமாறு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி ராதிகாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துவிடுவாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, கோபிக்கும் ராதிகாவும் தொடர்பு இருப்பது தெரிந்ததும் கோபிக்கு பாக்கியா விவாகரத்து கொடுத்துவிட்டார். குடும்பத்தினர்கள் அனைவரும் விவாகரத்து செய்யவேண்டாம் என தடுத்தும் கூட பாக்கியா தன் முடிவில் உறுதியாக இருந்து கோபிக்கு விவாகரத்து கொடுத்துவிட்டார்.
இது மட்டுமல்லாமல் விவாகரத்து பெற்ற கையோடு கோபி வீட்டை விட்டே செல்ல வேண்டும் என கூறினார். ஆனால், கோபி இந்த வீட்டிற்காக நான் நிறைய செலவு செய்திருக்கிறேன் நான் ஏன் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என சண்டை போட்டார். அப்போது பாக்கியா இந்த வீட்டிற்காக நீங்கள் செலவு செய்த 40 லட்ச ரூபாயை உங்களுக்கு தருகிறேன் இப்பொழுதே வீட்டை விட்டு கிளம்புங்கள் என கூறிவிட்டார். ஆனால், ஈஸ்வரி, செழியன் என அனைவருமே பாக்கியாவை கண்டபடி திட்டுகின்றனர்.
Exams Daily Mobile App Download
அதாவது, கோபி வீட்டை விட்டு சென்றால் எப்படியும் ராதிகாவை தான் சென்று சந்திப்பார். அதற்கு நீயே இடம் கொடுத்துவிட்டாய், தெருவில் உள்ள அனைவரிடமும் அசிங்கப்பட்டு நிற்க போகிறோம். உன்னால் தான் குடும்பமே பிரிந்து கிடக்கிறது என ஈஸ்வரியும், செழியனும் கோபி ஏமாற்றியதை மறந்துவிட்டு திட்டுகின்றனர். பாக்கியா எவ்வளவோ எடுத்து சொல்லியும் கூட ஈஸ்வரியும், செழியனும் கேட்பதாக இல்லை. இதற்கு பிறகு கோபியை மீண்டும் வீட்டிற்கு பாக்கியா அழைத்துவர போகிறாரா அல்லது நானும் வீட்டை விட்டு செல்கிறேன் என பாக்கியா செல்ல போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்