பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கடைசி புகைப்படம் எடுத்த ஐஸ்வர்யா – கவலையில் ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வரும் நடிகை விஜே தீபிகா நடிகர் சரவணன் விக்ரமுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இந்த சீரியலை விட்டு விலக போவதால், கடைசி புகைப்படமாக இதனை எடுத்து கொண்டுள்ளார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை:
சின்னத்திரை டிவி சீரியல்கள் மூலமாக தான் தற்போது அனைவரும் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். அந்த வகையில் விஜேவாக இருந்து பின் படிப்படியாக முன்னேறி சீரியல் நடிகையாக உயர்ந்துள்ளவர் தான் நடிகை தீபிகா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விஜேவாக பணியாற்றி வந்தார். அவ்வப்போது ஆடியோ லான்ச் மற்றும் திரைப்பட ரிவியூ கொடுத்து வந்தார். அதே போல பல குறும்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
விஜய் டிவி பிரபலத்திற்கு ரூ.1 லட்சம் கொடுத்து உதவிய நடிகர் விஜய் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தற்போது “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவருக்கு தனிப்பட்ட ஒரு அடையாளத்தை அளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த சீரியலில் முக்கிய கட்டமாக ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் குடும்பத்தினர் அனைவரும் இருவரையும் வெறுத்து வீட்டை விட்டு அனுப்பி விடுகின்றனர். கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி – அவரே வெளியிட்ட போட்டோ!
கண்ணன் ஜனார்த்தனன் கடைக்கு சென்று வேலை பார்க்கிறார். இப்படி பல விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், இந்த சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் விஜே தீபிகா விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விஜே தீபிகா தான் நடித்து வரும் செட்டில் கடைசியாக புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை பதிவேற்றியுள்ளார். அவர் இந்த சீரியலை விட்டு விலக இருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிகை காயத்ரி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.