5 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமாக இருக்கும் பிரபல தொகுப்பாளினி – அவரே வெளியிட்ட போட்டோ!
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா பிரபாகர். தற்போது திருமணம் முடிந்து வெளிநாட்டில் உள்ள நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
சன் டிவி தொகுப்பாளினி:
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் குடும்பம் அவார்ட்ஸ் என்ற விருது நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா பிரபாகர். சன் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.
சத்தமில்லாமல் நடந்த நடிகை வித்யூலேகாவின் திருமணம் – வாழ்த்தும் ரசிகர்கள்!
மேலும் மகாபாரத தொடர் போன்ற பல நிகழ்ச்சிகளில் பணியாற்றிய இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் விஜய் ஜூனியர் நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதுமட்டுமல்லாமல் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடனமாடினார். ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
செண்பகம் ரோஜாவின் அம்மா தான், அனுவிடம் சவால் விடும் அர்ஜுன் – வெளியான ப்ரோமோ!
திருமணத்திற்கு பின்னர் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அது குறித்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் தனக்கு பெண் குழந்தை பிறக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரபலங்கள் குழந்தை பெற்றுக் கொள்வது அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ரசிகர்கள் வாழ்த்துகளை லைக்குகள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.